ஆப்நகரம்

15 வயது சிறுவனை அடித்துக் கொன்றவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்: ஸ்டாலின்

கரூரில் 15 வயது சிறுவனை அடித்துக் கொன்றவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

Samayam Tamil 24 Sep 2018, 4:15 pm
கரூரில் செல்போன் திருடிய 15 வயது சிறுவனை அடித்துக் கொன்றவர்களை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Stalin-DMK


கரூர் மாவட்டம் உப்பிடமங்களத்தைச் அடுத்த அல்லாலிகவுண்டனூரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி இலஞ்சியம். கணவர் இறந்துவிட்ட நிலையில் இலஞ்சியம் தனது இரு குழந்தைகளுடனும் வசித்து வந்துள்ளார். இவரது மகன் பாலசுப்ரமணி(15), 8 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, அதற்குமேல் பள்ளிக்குச் செல்லாமல், கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவரது செல்போனை திருடியதாக சிறுவன் பாலசுப்ரமணியை அவரது வீட்டின் முன்பு கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளனர். இதில், படுகாயமடைந்த சிறுவன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இந்த கொலை வழக்கில், அல்லாலி கவுண்டனூரைச் சேர்ந்த பெரியசாமி, செல்வகுமார், மணிவேல், முனியாண்டி, முனியப்பன் ஆகிய 5 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், செல்போன் திருடியதாக 15 வயது சிறுவனை அடித்துக் கொன்றவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘கரூரில் செல்போன் திருடியதாகக் கூறி 15 வயது சிறுவனை ஒரு கிராமமே சேர்ந்து அடித்துக் கொன்றிருக்கும் செயல் நெஞ்சை பதற வைக்கிறது!

விபத்தாகவோ, வறுமையினாலோ சிறுவர்கள் வழி தவறினால், சீர்திருத்தப் பள்ளிகளில் சேர்க்க வேண்டுமே தவிர, அடித்துக் கொல்லும் உரிமை எவருக்கும் கிடையாது. ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து 8ஆம் வகுப்புக்கு மேல் படிக்க வசதியில்லாமல், கூலி வேலைக்குச் சென்று வந்த அச்சிறுவனின் குடும்பத்திற்கு இப்போது யார் பொறுப்பு?

இதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஈவு இரக்கமின்று சட்டத்தின் முன்பு நிறுத்தி உரிய தண்டனை வழங்கிட வேண்டும்’.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி