ஆப்நகரம்

கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது கரூர்

கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக கரூர் மாறியுள்ளது. எனினும், அண்டை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Samayam Tamil 30 Apr 2020, 6:06 pm
கரூர்: கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த அனைவரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதையடுத்து, கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டமாக கரூர் மாறியுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே வேளையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது சற்றே மகிழ்ச்சிகரமான விஷயமாக இருக்கிறது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 70 பேரில் 69 பேர் குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோடு மாறியது. அம்மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்.

கார்ப்ரேட்டுகளுக்கு கடன் தள்ளுபடி செய்வதா? கோவை எம்.பி. காட்டம்!

அதேபோல், திருச்சி மாநகரை சேர்ந்த 26 பேரும் குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனா தொற்று இல்லாத நகராக திருச்சி மாநகரம் மாறியுள்ளது. ஆனால், திருச்சி அரசு மருத்துவமனையில் அம்மாவட்டத்தை சேர்ந்தவர்கள், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த அனைவரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதையடுத்து, கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டமாக கரூர் மாறியுள்ளது.

கரூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அம்மாவட்டத்தைச் சேர்ந்த 42 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 41 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இன்று குணமடைந்தார். இதனால், கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக கரூர் மாறியுள்ளது.

சென்னையில் 4 மருத்துவமனைகளில் 560 பேருக்கு சிகிச்சை!!

எனினும், கரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் என மொத்தம் 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி