ஆப்நகரம்

செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக் கொலை: 5 பேர் கைது!

கரூரில் செல்போனை திருடியதாக 15 வயது சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 24 Sep 2018, 4:25 pm
கரூரில் செல்போனை திருடியதாக 15 வயது சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil cats


கரூர் மாவட்டம் உப்பிடமங்களத்தைச் அடுத்த அல்லாலிகவுண்டனூரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி இலஞ்சியம். கணவர் இறந்துவிட்ட நிலையில் இலஞ்சியம் தனது இரு குழந்தைகளுடனும் வசித்து வந்துள்ளார்.

இவரது மகன் பாலசுப்ரமணி(15), 8 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, அதற்குமேல் பள்ளிக்குச் செல்லாமல், கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு சில பொருட்கள் காணாமல் போயுள்ளது. செல்போனும் திருடு போயுள்ளது.

இதையடுத்து, சிறுவன் மீது சந்தேகமடைந்த சிலர், அவனது வீட்டிற்கு சென்று சிறுவனை கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளனர். இதில், படுகாயமடைந்த சிறுவன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

இதுகுறித்து தகவலறிந்த வெள்ளியணை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இகுறித்து கிராமத்தினரிடம் விசாரணை நடத்திய போலீசார், சிறுவனை அடித்துக் கொன்ற வழக்கில், அல்லாலி கவுண்டனூரைச் சேர்ந்த பெரியசாமி, செல்வகுமார், மணிவேல், முனியாண்டி, முனியப்பன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இவர்களை, கரூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி ரஹோத்தமன் முன்னிலையில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி