ஆப்நகரம்

கரூரில் ராவணனுக்கு பதிலாக மோடி புகைப்படத்தை வைத்து எரித்து வீடியோ வெளியிட்ட நபர் கைது

ராவணனின் கொடும்பாவிக்கு பதிலாக மோடியின் தலை வைத்து எரித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 25 Oct 2018, 10:23 pm
கரூர் : ராவணனின் கொடும்பாவியை எரிப்பதற்கு பதிலாக மோடியின் தலை வைத்து எரித்து வீடியோ வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil ravana


தசரா பண்டிகைக்காக 10 தலை ராவணனின் கொடும்பாவி நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரித்து கொண்டாடப்பட்டது. அந்த வகையில் கரூரில் சமூக ஆர்வலர் தென்னரசு என்பவர் ராவணனின் 10 தலைகளுக்கு பதிலாக, மோடியின் கொடும்பாவியை (உருவ பொம்மை) எரித்து அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் இன்று வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து தென்னரசை கரூர் டவுன் போலீஸார் கைது செய்துள்ளனர்.

The Karur town police arrested an activist Thennarasu for burning a ten-headed effigy of PM Modi and spreading its video on social media this evening.

அடுத்த செய்தி