ஆப்நகரம்

காஷ்மீர் வன்முறை, மாவோயிஸ்டு பிரச்னைகளுக்கு அரசியல் தீர்வு காணவேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

காஷ்மீர் வன்முறை, மாவோயிஸ்டு பிரச்னைகளுக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தெரிவித்துள்ளார்.

TNN 16 Oct 2016, 4:48 am
சென்னை: காஷ்மீர் வன்முறை, மாவோயிஸ்டு பிரச்னைகளுக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil kashmir protest maoist problems should have political solution says sc chief judge
காஷ்மீர் வன்முறை, மாவோயிஸ்டு பிரச்னைகளுக்கு அரசியல் தீர்வு காணவேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி


சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் சர்.சி.வி.ராமசாமியின் ஐயர் பவுண்டேசனின் 50வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமை வகித்தார். அப்போது பேசிய அவர், காஷ்மீர் பிரச்னை, மாவோயிஸ்ட் பிரச்னை உள்ளிட்டவை மிகப்பெரிய சவாலாக இருப்பதாக கூறினார்.

இந்தப் பிரச்னைகளை தீர்க்க அரசியல் ரீதியான தீர்வு காண வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Kashmir Protest, Maoist Problems should have political solution says SC chief judge.

அடுத்த செய்தி