ஆப்நகரம்

கீழடி: பூந்தொட்டி வடிவில் மண் தொட்டிகள் கண்டுபிடிப்பு

கீழடி 6-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியில் பூந்தொட்டி வடிவில் 6 மண் தொட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன.

Samayam Tamil 13 Jun 2020, 6:12 pm
தமிழ் நாகரிகத்தின் சீராகக் கட்டமைக்கப்பட்ட தொன்மையை இன்னும் பின்னோக்கிக் கொண்டு செல்ல ஆதாரமாக விளங்கிய கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வில் ஏராளமான தொல்பொருட்கள் கிடைத்து வருகின்றன. தற்போது பூந்தொட்டி வடிவில் 6 மண் தொட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன.
Samayam Tamil keezhadi 6th phase excavation found 6 potteries
கீழடி: பூந்தொட்டி வடிவில் மண் தொட்டிகள் கண்டுபிடிப்பு



கீழடியில் நடத்தப்பட்ட 4ஆம் கட்ட அகழாய்வின் முடிவுகள் வெளியானபோது தமிழகத்தில் கீழடியைத் தவிர வேறு ஒரு பேசுபொருள் இல்லாமல் போனது. குறிப்பாக, அதன்பிறகு 5ஆம் கட்ட அகழாய்வு முடிந்து இன்னும் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில், 6ஆம் கட்ட அகழாய்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.


கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் 6-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளில் இதுவரை முதுமக்கள் தாழிகள், மனித மற்றும் விலங்கு எலும்பு கூடுகள், பாசி மணிகள், சங்கு வளையல்கள், அம்மிக் குளவி, கொள்கலன்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

குறிப்பாக, சுடவைக்கும் உலைகலன் ஒன்றும், எலும்புக்கூடு ஒன்றும் இரு வாரங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பேசுபொருளாக மாறியது. இந்நிலையில் மணலுரில் 2 வாரங்களுக்கு முன் கண்டறியப்பட்ட மண் பாண்டங்களை சூடு செய்ய பயன்படும் சுமார் ஒன்றரை மீட்டர் சுற்றளவிலான உலை கலனிலிருந்து பூந்தொட்டி வடிவில் 6 மண் தொட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை தொழில் கூடங்களில் பயன்படுத்தப்பட்டவையா அல்லது வீட்டில் பயன்படுத்தப்பட்டவையா என தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி