டெல்லி: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் கேரளா, புதுச்சேரிக்கு காவிரி நீர் ஒதுக்கீட்டில் மாற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீரை எந்த மாநிலமும் சொந்தம் கொண்டாட உரிமை இல்லை என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. நீர் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளனர். காவிரி நடுவர் மன்றம் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக இறுதித் தீர்ப்பில் 192 டி.எம்.சி. நீர் ஒதுக்கப்பட்ட நிலையில், தமிழகம் 264 டி.எம்.சி. நீர் கோரியது. ஆனால், 177.25 டி.எம்.சி. நீர் வழங்க உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 20 டி.எம்.சி. நிலத்தடி நீர் உள்ளது என்பதால் தமிழகத்துக்குக் 14.75 டி.எம்.சி. நீர் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நீர் கர்நாடகாவுக்கு ஒதுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. கர்நாடகத்திற்குக் கூடுதலாகக் கிடைக்கும் 14.75 டி.எம்.சி. நீரில் 10 டி.எம்.சி. நீர் கர்நாடாக பாசன வசதிக்காவும் 4.75 டி.எம்.சி. நீர் பெங்களூர் குடிநீர் தேவைக்காகவும் வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் காவிரியில் இருந்து 284.75 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகாவுக்குக் கிடைக்கும்.
இதேபோல, கேரளாவுக்கும் புதுச்சேரிக்கும் நடுவர் மன்றத் தீர்ப்பில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டிருந்ததைப் போல நீர் ஒதுக்கப்படும். கேரளாவுக்கு 30 டி.எம்.சி. நீரும் புதுச்சேரிக்கும் 7 டி.எம்.சி. நீரும் கிடைக்கும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரியில் புதிய அணை கட்டக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காவிரி இதுவே காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்குகளுக்கு இறுதித் தீர்ப்பு ஆகும். இதனால், காவிரி விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்துவைக்கப்படுகின்றன. இத்தீர்ப்பை எதிர்த்து யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது.
வழக்கின் பின்னணி
2007ஆம் ஆண்டு பிப்ரவரியில் காவிரி நடுவர் மன்றம் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக இறுதித் தீர்ப்பு வழங்கியது. இதன்படி, கர்நாடக அரசு தமிழகத்துக்கு 10 மாத இடைவெளியில் 192 டிஎம்சி காவிரி நீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்கள் தனித்தனியாக மேல்முறையீடு செய்துள்ளன. இந்த தீர்ப்பில் விளக்கம் கோரி தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி அரசுகள் மனுக்களை தாக்கல் செய்துள்ளன. இந்த 4 மாநிலங்களின் வழக்குகள் ஒன்றாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன் விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கில் 4 மாநிலங்களும் தங்கள் தரப்பு வாதங்களை ஆவணங்களுடனும் நிபுணர்களின் கருத்துக்களுடனும் முன்வைத்தன. இதனையடுத்து கடந்த செப்டம்பர் 2017ல் இவ்வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி மறு உத்தரவு வரும் வரை கர்நாடக அரசு வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால், கர்நாடக அரசு இந்த தீர்ப்பின்படி தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கவில்லை.
காவிரி நீரை எந்த மாநிலமும் சொந்தம் கொண்டாட உரிமை இல்லை என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. நீர் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளனர். காவிரி நடுவர் மன்றம் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக இறுதித் தீர்ப்பில் 192 டி.எம்.சி. நீர் ஒதுக்கப்பட்ட நிலையில், தமிழகம் 264 டி.எம்.சி. நீர் கோரியது. ஆனால், 177.25 டி.எம்.சி. நீர் வழங்க உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 20 டி.எம்.சி. நிலத்தடி நீர் உள்ளது என்பதால் தமிழகத்துக்குக் 14.75 டி.எம்.சி. நீர் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நீர் கர்நாடகாவுக்கு ஒதுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. கர்நாடகத்திற்குக் கூடுதலாகக் கிடைக்கும் 14.75 டி.எம்.சி. நீரில் 10 டி.எம்.சி. நீர் கர்நாடாக பாசன வசதிக்காவும் 4.75 டி.எம்.சி. நீர் பெங்களூர் குடிநீர் தேவைக்காகவும் வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் காவிரியில் இருந்து 284.75 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகாவுக்குக் கிடைக்கும்.
இதேபோல, கேரளாவுக்கும் புதுச்சேரிக்கும் நடுவர் மன்றத் தீர்ப்பில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டிருந்ததைப் போல நீர் ஒதுக்கப்படும். கேரளாவுக்கு 30 டி.எம்.சி. நீரும் புதுச்சேரிக்கும் 7 டி.எம்.சி. நீரும் கிடைக்கும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரியில் புதிய அணை கட்டக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காவிரி இதுவே காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்குகளுக்கு இறுதித் தீர்ப்பு ஆகும். இதனால், காவிரி விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்துவைக்கப்படுகின்றன. இத்தீர்ப்பை எதிர்த்து யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது.
வழக்கின் பின்னணி
2007ஆம் ஆண்டு பிப்ரவரியில் காவிரி நடுவர் மன்றம் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக இறுதித் தீர்ப்பு வழங்கியது. இதன்படி, கர்நாடக அரசு தமிழகத்துக்கு 10 மாத இடைவெளியில் 192 டிஎம்சி காவிரி நீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்கள் தனித்தனியாக மேல்முறையீடு செய்துள்ளன. இந்த தீர்ப்பில் விளக்கம் கோரி தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி அரசுகள் மனுக்களை தாக்கல் செய்துள்ளன. இந்த 4 மாநிலங்களின் வழக்குகள் ஒன்றாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன் விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கில் 4 மாநிலங்களும் தங்கள் தரப்பு வாதங்களை ஆவணங்களுடனும் நிபுணர்களின் கருத்துக்களுடனும் முன்வைத்தன. இதனையடுத்து கடந்த செப்டம்பர் 2017ல் இவ்வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி மறு உத்தரவு வரும் வரை கர்நாடக அரசு வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால், கர்நாடக அரசு இந்த தீர்ப்பின்படி தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கவில்லை.