ஆப்நகரம்

ஜெ., நலம் பெற கேரள மக்கள் பிராத்தனை செய்வார்கள்: கேரள முதல்வர்

தமிழக முதல்வர் ஜெயலலிதா நலம் பெற கேரள மக்கள் பிராத்தனை செய்வார்கள் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

TNN 10 Oct 2016, 2:27 pm
சென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதா நலம் பெற கேரள மக்கள் பிராத்தனை செய்வார்கள் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil kerala cm pinarayi vijayan and governor satha sivam visit apollo hospital
ஜெ., நலம் பெற கேரள மக்கள் பிராத்தனை செய்வார்கள்: கேரள முதல்வர்


தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 22-ம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறது. ராகுல் காந்தி,வெங்கையா நாயுடு மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் பெரும்பாலானோர் முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் வந்து சென்றுள்ளனர்.

இதனிடையே தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கேரள ஆளுநர் சதா சிவம் ஆகியோர் இன்று மதியம் சுமார் 1.40 மணியளவில் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தனர்.

இதன்பின்னர் கேரள ஆளுநர் சதாசிவம் செய்தியாளர்களிடம் கூறியதாவது" ஜெயலலிதா விரைவில் பூரண நலத்துடன் வீடு திரும்புவார் .அவர் உடல் பூரண குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன்"என்று அவர் கூறினார்.இதன் பின்னர் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்வை சந்திக்க கேரள ஆளுநர் சதாசிவம் தமிழக ஆளுநர் மாளிகைக்கு சென்றார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறும்போது :"முதல்வர் உடல்நிலை தொடர்பாக மருத்துவர்கள் நல்ல தகவலையே கூறினார்கள். தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற கேரள மக்கள் பிராத்தனை செய்வார்கள் " என்று கேரள முதல்வர் கூறினார்கள்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கேரள ஆளுநர் சதாசிவர் ஆகிய இருவரும் ஏற்கெனவே முதல்வர் நலம் பெற வேண்டும் என்று சமுகவலை தளங்கள் மூலமாக வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி