ஆப்நகரம்

தமிழக நீட் மாணவர்களா? வாங்க நாங்க உதவி பண்றோம்; பினராயி விஜயன்!

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவக் கேரள அரசு தயாராக உள்ளது.

Samayam Tamil 4 May 2018, 11:00 pm
திருவனந்தபுரம்: நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவக் கேரள அரசு தயாராக உள்ளது.
Samayam Tamil Pinarayi Vijayan
பினராயி விஜயன்


மருத்துவப் படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வான நீட், வரும் 6ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனால் தமிழக கிராமப்புற மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிட்டுள்ளது. இதற்கிடையில் பல்வேறு அரசியல் கட்சிகள், தனியார் அமைப்புகள் நீட் தேர்வு மாணவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளன.

இதுதொடர்பான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கேரளா வரும் தமிழக மாணவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்க முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் தங்கும் வசதி செய்துதர மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Kerala Govt helps NEET exam students from Tamilnadu.

அடுத்த செய்தி