ஆப்நகரம்

முல்லைப் பெரியாறு: உச்ச நீதிமன்றத்தை நாடும் கேரளா - என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?

முல்லைப் பெரியாறு அணையைச் சுற்றி மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்துகள் கேரளாவில் வலம் வருகின்றன.

Samayam Tamil 25 Oct 2021, 10:40 am
கேரளாவில் கனமழை பெய்து வெள்ளம் சூழும் போதெல்லாம் முல்லைப் பெரியாறு அணை குறித்த சந்தேகத்தையும் சர்ச்சையையும் கிளப்புவது வாடிக்கையாகிவிட்டது.
Samayam Tamil mk stalin mullaperiyar


முல்லைப் பெரியாறு அணையின் உயரம் 152 அடி. ஆனால் 136 அடி நீர் தான் தேக்கிவைக்கப்பட வேண்டும் என கேரள அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. முழு கொள்ளளவு நீரை தேக்கி வைக்க தமிழகம் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கின் காரணமாக 142 அடி நீரை தேக்கிவைக்கலாம் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில்கூட முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
தலைமைச் செயலாளர் வெளியிட்ட இனிப்பான செய்தி!
சர்வதேச நிபுணர்களை கொண்டு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது

அதில், முல்லை பெரியாறு அணை வலுவாகவே இருப்பதால் பாதுகாப்பு பற்றி பேச இனி எதுவுமில்லை. அணை கதவுகள், மதகுகள், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்த பழுதுகள் சரி செய்யப்பட்டு விட்டன.இன்னும் இருக்கும் சிறு விறு வேலைகளும் இந்தாண்டு இறுதிக்குள் முழுமையாக நிறைவடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சசிகலா இன்னொரு ஜானகியா, அடுத்த ஜெயலலிதாவா?

இந்த சூழ்நிலையில் கேரளாவில் தொடர்ந்து முல்லை பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகவும் 35 லட்சம் பேருக்கு அபாயம் இருப்பதாகவும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கேரளத் திரைத்துறையைச் சேர்ந்த பிரித்விராஜ் உள்ளிட்ட பலரும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் 5 மாவட்ட மக்களின் நீர், உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முக்கிய காரணமாக இருக்கும் முல்லை பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்பதே அவர்களது வாதமாக உள்ளது.

இந்நிலையில் இன்று கேரள அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் முல்லை பெரியாறு தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 142 அடிக்குப் பதிலாக 139 அடி மட்டுமே நீரை தேக்கி வைக்க வேண்டும் என கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிடும் என்கிறார்கள்.

இதற்கு தமிழக அரசு தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படப் போகிறது என்பது உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா முயற்சியால் சட்ட ரீதியாக 142 அடியாக உயர்த்தப்பட்ட நீர் தேக்க அளவு தனது ஆட்சிக் காலத்தில் குறைந்துவிடக்கூடாது என்பதில் ஸ்டாலின் கவனமாக இருக்கிறார். இதற்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த செய்தி