ஆப்நகரம்

ஐஎஸ் வாட்ஸ் ஆஃப் குழுவில் கேரள இளைஞர்கள்

ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் வாட்ஸ் ஆஃப் குழுவில் கேரள இளைஞர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

TNN 12 May 2017, 9:46 pm
டெல்லி: ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் வாட்ஸ் ஆஃப் குழுவில் கேரள இளைஞர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
Samayam Tamil kerala youths join in isis whats app group
ஐஎஸ் வாட்ஸ் ஆஃப் குழுவில் கேரள இளைஞர்கள்


இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது: கேரளாவின் திரிகரிபூர் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட ராஷித் அப்துல்லா என்ற இளைஞரால் உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் குழுவில் கேரளாவைச் சேர்ந்த 211 இளைஞர்கள் இணைப்பட்டுள்ளனர்.

அந்த குழுவில் இணைக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் திரிகரிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரையும் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் போராட ஐஎஸ் பயங்கரவாத குழுவில் இணைய அக்குழுவில் வலியுறுத்தியுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கேரளாவில் இருந்து காணமல் போன இளைஞர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளதாக வெளியான தகவலையடுத்து, அவர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானில் இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்ட குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Kerala youths join in ISIS whats app group

அடுத்த செய்தி