ஆப்நகரம்

தீவிரவாத செயல்களுக்கு பயன்படுகிறதா டெலகிராம் அப்ளிகேஷன்?

சமீபத்தில் கேரள இளைஞர்கள் சிலர் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக கூறப்படும் சம்பவத்தில் அந்த இளைஞர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு டெலகிராம் மொபைல் அப்ளிகேஷன் மூலம் மெசேஜ் அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது.

TNN 13 Jul 2016, 4:58 pm
சமீபத்தில் கேரள இளைஞர்கள் சிலர் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக கூறப்படும் சம்பவத்தில் அந்த இளைஞர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு டெலகிராம் மொபைல் அப்ளிகேஷன் மூலம் மெசேஜ் அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது.
Samayam Tamil keralas missing muslim youth used telegram apps secret chat
தீவிரவாத செயல்களுக்கு பயன்படுகிறதா டெலகிராம் அப்ளிகேஷன்?


டெலகிராம் மொபைல் அப்ளிகேஷன் ,வாட்ஸ் ஆப் போல நண்பர்களுடன் உரையாடுவதற்காக உருவாக்கப்பட்டது.ஆனால் இந்த அப்ளிகேஷனில் இருக்கும் சீக்ரெட் சாட் என்ற வசதி மூலம் பேசினால் ,யாரும் கண்டுபிடிக்க முடியாது என்பதால் சமீபத்தில் ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்த கேரள இளைஞர்கள்,தங்களுக்குள் பேசிக்கொள்ளவும்,ஐ.எஸ்.இயக்கத்திற்கு ஆள் சேர்க்கவும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தியுள்ளனர்.


கேரளாவை சேர்ந்த ஹசிபுதீன் என்ற இளைஞர் தான் முழு ஷரியா சட்டங்கள் அமல்படுத்தப்பட்டிக்கும் நாட்டுக்கு வந்துவிட்டதாக தனது தந்தையான ஹக்கீமுக்கு டெலகிராமில் செய்தி அனுப்பியுள்ளார்.மேலும் ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக கூறப்படும் கேரளா,லட்சத்தீவு,இலங்கையை சேர்ந்த இளைஞரும் டெலகிராம் மூலம்தான் தாங்கள் ஐ.எஸ்சில் இணைந்துள்ள செய்தியை தங்கள் பெற்றோருக்கு தெரிவித்துள்ளனர்.இதற்காகவே சில வீடுகளில் இந்த அப்ளிகேஷனை டவுன்லோடு செய்யவும் அந்த இளைஞர்கள் வற்புறுத்தியுள்ளனர்.


ஏற்கனவே இது போன்ற பாதுகாக்கப்பட்ட மெசேஜ் வசதியை வாட்ஸ் அப் கொண்டு வந்ததற்கு இந்திய புலனாய்வுத் துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.தற்போது டெலகிராமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது.

அடுத்த செய்தி