ஆப்நகரம்

கோவை: 3 வீடுகள் மீது மர்மநபர்கள் கெரசின் குண்டுகள் வீச்சு

பொத்தனூர் பகுதியில் 3 வீடுகள் மீது மர்மநபர்கள் கெரசின் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

TNN 30 Sep 2016, 10:40 am
கோவை: பொத்தனூர் பகுதியில் 3 வீடுகள் மீது மர்மநபர்கள் கெரசின் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
Samayam Tamil kerosene bomb hurled at 3 houses in potthanur area of coimbatore
கோவை: 3 வீடுகள் மீது மர்மநபர்கள் கெரசின் குண்டுகள் வீச்சு


கோவை துடியலூர் அருகே உள்ள சுப்பிரமணியபாளையத்தை சேர்ந்த சசிகுமார், இந்து முன்னணி செய்தித் தொடர்பாளராக செயல்பட்டு வந்தார். இவர் கடந்த 22ஆம் தேதி மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து கோவை முழுவதும் கலவரம் வெடித்தது. பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன. ஏராளமான கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.

சசிகுமார் கொலை பற்றி விசாரிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சசிகுமாரின் மனைவி தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை பொத்தனூர் பகுதியில் உள்ள 3 வீடுகளில் மர்மநபர்கள் கெரசின் குண்டுகளை வீசி சென்றுள்ளனர். இதில் யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

English Summary: Kerosene Bomb hurled at 3 houses in Potthanur area of Coimbatore today morning by unidentified persons. Investigation underway.

அடுத்த செய்தி