ஆப்நகரம்

அரசு பள்ளி சமையலர் பாப்பாளின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல்!

திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளான அரசு பள்ளி சமையலர் பாப்பாளின் கணவர், தனது குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

Samayam Tamil 7 Aug 2018, 11:46 am
திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளான அரசு பள்ளி சமையலர் பாப்பாளின் கணவர், தனது குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
Samayam Tamil pap 2
அரசு பள்ளி சமையலர் பாப்பாளின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல்!


அவிநாசி அடுத்த திருமலைகவுண்டம் பாளையம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் பாப்பாள் (வயது 42). இவர் ஒச்சாம்பாளையம் பள்ளியில் சத்துணவு சமையலராக பணியாற்றி வந்த நிலையில், திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து அந்த பகுதியைச் சேர்ந்த மேல் சாதியினர், ஒரு சிலர் பாப்பாள் அந்த பள்ளியில் சமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாப்பாள் ஏற்கனவே பணியாற்றிய ஒச்சாம்பாளையம் பள்ளிக்கே இடமாறுதல் செய்யப்பட்டார்.

இந்த பிரச்சினை தொடர்பாக பாப்பாள் சேவூர் போலீசில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க, பாப்பாளுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களை நடத்தினர். இதைத் தொடர்ந்து, பாப்பாளின் இடமாற்றம் ரத்து செய்யப்பட்டு, திருமலைக்கவுண்டன் பாளையம் பள்ளியில் சமையலராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையில் பாப்பாள் அளித்த புகாரின் பேரில் சேவூர் போலீசார், பல்வேறு பிரிவுகளின் கீழ் 87 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 8 பேரை கைது செய்துள்ளனர்.

இதனிடையே தனது மனைவி பாப்பாள் மற்றும் குடும்பத்தினருக்கு மிரட்டல்கள் வருவதாகவும், எனவே பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் பாப்பாளின் கணவர் பழனிசாமி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.கயல்விழியிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

அடுத்த செய்தி