ஆப்நகரம்

பட்டாசு விபத்தில் காயமடைவோருக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிாிவு – கீழ்பாக்கம் மருத்துவமனையில் தொடக்கம்

தீபாவளியை முன்னிட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 24 மணிநேர தீக்காய சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் வசந்தாமணி தொிவித்துள்ளார்.

TOI Contributor 16 Oct 2017, 10:55 am
தீபாவளியை முன்னிட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 24 மணிநேர தீக்காய சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் வசந்தாமணி தொிவித்துள்ளார்.
Samayam Tamil kilpauk government hospital special treatment division in diwali
பட்டாசு விபத்தில் காயமடைவோருக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிாிவு – கீழ்பாக்கம் மருத்துவமனையில் தொடக்கம்


தீபாவளியில் வெடி வெடிக்கும் போது ஏற்படும் கவனக்குறைவு காரணமாக வெடி விபத்துகள் ஏற்படுகின்றன. விபத்துகளில் காயமடைபவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு சிகிச்சை பிரிவு அமைக்கப்படுவது வழக்கம். அந்தவகையில், இந்த ஆண்டும் சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ‘டீன்’ வசந்தாமணி பத்திாிகையாளா்களிடம் கூறியதாவது:-

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள தீக்காய பிரிவில் ஏற்கனவே 50 படுக்கை வசதிகள் கொண்ட வார்டு உள்ளது. இதுதவிர குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பிரிவு தனியாக செயல்படுகிறது. தீபாவளியையொட்டி தற்போது சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த சிறப்பு தீக்காய சிகிச்சை பிாிவில் 10 படுக்கைகள் உள்ளன. தீக்காயத்தால் பாதிக்கப்படும் பெரியவர்களுக்கு ஏற்கனவே உள்ள தீக்காய பிரிவிலேயே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் இந்த பிரிவு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கும். இங்கு முதுநிலை மருத்துவர்கள், பொறுப்பு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இருப்பார்கள். இதுதவிர, தீக்காயம் ஏற்பட்டு வரும் நபருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக அவசர சிகிச்சை பிரிவில் ஆண்கள், பெண்களுக்கு என தலா 10 படுக்கை வசதிகள் உள்ளன. தேவையான மருந்துகள், பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.

தீக்காயம் ஏற்பட்டவுடன் முதலில் சுத்தமான நீரால் காயத்தை கழுவ வேண்டும். பின்னர், தூய்மையான துணியால் காயத்தை கட்டி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.

காயத்தின் மீது மை, மஞ்சள், காபித்தூள், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை போடக்கூடாது. இதனால், காயத்தின் தன்மை எப்படி உள்ளது? என்பது தெரியாமல் போய் விடும் என்று மருத்துவமனை டீன் கூறினார்.

அடுத்த செய்தி