ஆப்நகரம்

திரும்பி வந்துட்டேன்னு சொல்லு: லலிதா ஜுவல்லர்ஸ் கிரண்குமார்

திருச்சியிலுள்ள லலிதா ஜுவல்லரியில் கொள்ளை சம்பவம் நடந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அந்நிறுவனத்தினர் இன்று தமிழ் தினசரியில் முதல் பக்கம் முழுக்க விளம்பரம் கொடுத்து நம்பிக்கையோடு நடைபோடத் தொடங்கியுள்ளனர்.

Samayam Tamil 4 Oct 2019, 11:04 am
முன்னணி நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களில் நடிக்க விளம்பர மாடல்களை உபயோகித்தது எல்லாம் மாறிப்போய் நாமே நடிக்கலாம் என்று அதன் உரிமையாளர்களே களமிறங்கிவிட்டனர். லெஜண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன், ஆச்சி மசாலா உரிமையாளர், லலிதா ஜுவல்லரி உரிமையாளர் கிரண் குமார் ஆகியோர் இந்த பட்டியலில் முன்னணியில் நிற்கின்றனர்.
Samayam Tamil laitha

இதில் லெஜண்ட் சரவணா விரைவில் சினிமாவில் ஹீரோவாக களமிறங்குவதாக அறிவிப்புகள் வெளியாகி கோலிவுட் முன்னணி நடிகர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கியிருக்கிறது. லலிதா ஜுவல்லரி கிரண் குமாரும் விளம்பரப் படங்கள் மூலம் பிரபலமானாலும் அவரைச் சுற்றி சினிமா கிசுகிசுக்கள் ஏதும் வரவில்லை.

விளம்பரங்களில் தலை காட்டிய அவர் மக்கள் மத்தியில் பிரபலமானதால் திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளை போன சம்பவம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரை கைதுசெய்துள்ள போலீஸ் 4.5 கிலோ நகைகளை மீட்டுள்ளது. மீதமுள்ள நகைகளை மீட்டு கொள்ளையர்களை கைதுசெய்ய போலீஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் இன்று, ‘உண்மையான விலைதான் உண்மையான கிஃப்ட்’ என்று தமிழ் தினசரியில் ஒரு பக்க விளம்பரம் கொடுத்து, நகைகள் வாங்குபவர்களுக்கு பல்வேறு பரிசுப்பொருள்களை அறிவித்துள்ளது லலிதா ஜுவல்லர்ஸ். திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரி இன்னும் திறக்கப்படாத நிலையில் மற்ற கிளைகளில் இந்த சலுகைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விரைவில் திருச்சி ஷோரூமும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி