ஆப்நகரம்

வலுவிழந்து திசை மாறியது கியான்ட்; இன்று துவங்குகிறது மழை

கியனட் புயல் வலுவிழந்து திசை மாறியதால் தமிழகத்தில் இன்று முதல் மழை தொடங்கவுள்ளது.

TNN 28 Oct 2016, 12:04 am
சென்னை: கியனட் புயல் வலுவிழந்து திசை மாறியதால் தமிழகத்தில் இன்று முதல் மழை தொடங்கவுள்ளது.
Samayam Tamil kiyant cyclone from today onwards rain starts intn
வலுவிழந்து திசை மாறியது கியான்ட்; இன்று துவங்குகிறது மழை


தமிழகத்தில் ஆண்டு தோறும் அக்டோபர் 20-ம் தேதி வாக்கில், தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு, வழக்கம் போலவே வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், அது தள்ளிப்போனது. மேலும், வருகிற 30-ம் தேதியன்று வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படது.

இதனிடயே, வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, புயலாக மாறி ஒடிசாவை நோக்கி நகர்ந்து வந்தது. இந்நிலையில், இந்த கியாண்ட் புயல் திசை மாறியதால் தமிழகத்தில் இன்றே மழை துவங்க வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.

விசாகப்பட்டினம் மற்றும் ஒடிசாவின் கோபால்பூர் இடையிலான பகுதியை கடக்கும் என, கணக்கிடப்பட்ட கியான்ட் புயல், காற்றின் திசை மாறியதால், ஒடிசாவை நோக்கி செல்லாமல், தென்மேற்கு பக்கமாக, ஆந்திராவில், ஓங்கோல் மற்றும் நெல்லூருக்கு இடைப்பட்ட பகுதியை நோக்கி புயல் நெருங்குகிறது.

அதேபோல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி, வலுவிழந்த நிலையில் உள்ள இந்த கியான்ட் புயலானது, வருகிற 28-ம் தேதியன்று ஆந்திர கடற்பகுதியை நெருங்கும்போது அல்லது கரையை நெருங்கியதும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறும்.

எனவே, தமிழகத்தில் இன்றே மழை துவங்க வாய்ப்புள்ளது. மேலும், சென்னை உள்பட வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில், அக்., 29, 30-ம் தேதிகளில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
Kiyant Cyclone: From today onwards rain starts inTN

அடுத்த செய்தி