ஆப்நகரம்

சொத்து வரி உயர்வு... காசு இல்லப்பா: கே.என்.நேரு விளக்கம்!

உள்ளாட்சி அமைப்புகள் தங்களுக்கான நிதித் தேவையை தாங்களே உருவாக்கிக் கொள்வதற்காக சொத்து வரி உயர்வு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்

Samayam Tamil 12 May 2022, 5:08 pm
சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை அலுவலகத்தில், 126 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை, கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 71 நபர்களுக்கு நிதியுதவி ஆகியவற்றை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
Samayam Tamil கே.என்.நேரு
கே.என்.நேரு


அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, சில இடங்களில் சொத்து வரி கட்டாமல் இருப்பதாகவும், அனைவருக்கும் ஒரே மாதிரியான வரியை வசூலிக்கவும், முறையற்ற நிர்வாகத்தை, முறைப்படுத்தவுமே சொத்து வரி உயர்வு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், 10, 15 வருடங்களுக்கு ஒருமுறை உயர்த்துவது சரியாக இருக்காது என்பதற்காகவே, ஆண்டுதோறும் உயர்த்திக்கொள்ளும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்காக திட்டங்கள் தீட்டவும், உள்ளாட்சி அமைப்புகள் தங்களுக்கான நிதித் தேவையை தாங்களே உருவாக்கிக் கொள்வதற்காகவுமே சொத்து வரி உயர்வு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.

தள்ளிப்போகும் உதயநிதி பதவியேற்பு: ஸ்டாலின் வீட்டில் என்ன நடக்கிறது?
விலைவாசி உயர்வை ஏற்படுத்துவதற்கோ, யாரையும் சங்கடப்படுத்துவதற்கோ சொத்து வரி உயர்த்தப்படவில்லை என்று தெரிவித்த அமைச்சர் கே.என்.நேரு, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சொத்து வரி குறைவாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். எந்த ஒரு அரசு நிலத்தையும் தனியாருக்கு விட்டுக்கொடுக்கமாட்டோம் எனவும் அமைச்சர் அப்போது தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “அம்மா உணவகங்களை முன்பு இருந்ததை விட மிகச்சிறப்பாக நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதால், அதை சிறப்பாக நடத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அம்மா உணவக பணியாளர்கள் யாரும் பணிநீக்கம் செய்யப்படவில்லை. அம்மா உணவகங்களில் குறைபாடு இருப்பதாக சுட்டிக்காட்டினால், அது நிவர்த்தி செய்யப்படும்.” என்றார்.

இந்த நிகழ்வில் அதிகாரிகள் ஷிவ்தாஸ் மீனா, பொன்னையா, மேயர் ப்ரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன்பின்னர், நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகளுக்கு 10 வாகனங்களை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

அடுத்த செய்தி