ஆப்நகரம்

பாதாள சாக்கடை: மதுரை ரூட் கிளியர்.. சிவகாசி, ஓசூருக்கு அமைச்சர் சொன்ன அப்டேட்!

மதுரையில் ரூ.500 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 11 Jan 2023, 1:15 pm
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கியது. 13ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் இன்று மூன்றாவது நாள்.
Samayam Tamil kn nehru


இன்றைய தினம் கேள்வி நேரத்தின் போது மதுரை வடக்கு தொகுதி திமுக சட்ட மன்ற உறுப்பினர் கோ.தளபதி," மதுரையில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாய்கள் மாற்றி அமைக்கப்படுமா” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, “தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள் உள்ளன. இதில் 19 மாநகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஓசூர் மற்றும் சிவகாசியில் விரைவில் இந்த பணிகள் தொடங்க உள்ளன.

அதிமுகவில் இறுதிச்சுற்று: நாக் அவுட் செய்ய பிளான் போடும் ஓபிஎஸ், இபிஎஸ்!

மதுரையில் ரூ.500 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே ஏற்கெனவே உள்ள குழாய்களை மாற்றுவது தொடர்பாக ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.

மேலும் இன்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு,"மதுரை போன்ற பெருநகரங்களுக்கு அருகில் உள்ள நகரங்களுக்கு, பெருநகரங்களில் உள்ளது போல் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெருநகரங்களின் அருகில் உள்ள நகரங்களிலும், பெருநகரங்களுக்கு இணையான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.
இலவச மின்சார பயனாளிகளுக்கு மின் இணைப்பு ஆணை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!
மக்கள் தொகையின் அடிப்படையில் இல்லாமல், எங்கு தேவை உள்ளதோ, அங்கு இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த கொள்கை முடிவு எடுக்கப்படும். இதன்மூலம் பெருநகரங்களில் மக்கள் நெருக்கடி குறையும்." என்று அவர் கூறினார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி