ஆப்நகரம்

திருச்சி விமான நிலையத்தில் ஓபிஎஸ் மீது கத்தி குத்து?

திருச்சி விமான நிலையத்திற்கு சென்ற ஓபிஎஸை ஒருவர் கத்தியால் குத்த முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 6 Aug 2017, 12:09 pm
திருச்சி : திருச்சி விமான நிலையத்திற்கு சென்ற ஓபிஎஸை ஒருவர் கத்தியால் குத்த முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil knife threat to o panneerselvam in trichy airport
திருச்சி விமான நிலையத்தில் ஓபிஎஸ் மீது கத்தி குத்து?


திருச்சி விமான நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வந்தார். அப்போது விமான நிலையம் முன்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார். அங்கு அவரிடம் இரு அணிகளும் இணைப்பது தொடர்பாக ஏதேனும் பேச்சுவார்த்தை நடைப்பெற்றதா என கேள்வி கேட்கப்பட்டுக் கொண்டிருந்த போது, அவரை ஒருவர் கத்தியால் குத்த முயன்றுள்ளார்.

அவரை போலீஸார் பிடித்து கைது செய்தனர். ஓபிஎஸை கத்தியால் தாக்க முயன்ற நபரை, அவரின் ஆதரவாளர்கள் பிடித்து தாக்கினர். பின்னர் அவர்களிடமிருந்து போலீஸார் கைது செய்து விசாரணைக்காக வாகனத்தில் அழைத்து சென்றார்.

தற்போது வந்துள்ள தகவலின் படி, தாக்க வந்த நபர், பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்து கொண்டிருந்த அந்த பகுதியில், முன்னேறி ஓபிஎஸ் அருகே செல்ல முயன்றுள்ளார். அவர் மீது சந்தேகமடைந்த ஆதரவாளர்கள் அவரை சோதனை செய்ததில், அவரிடம் கத்தி இருந்தது கண்டுபிடித்தனர்.

அடுத்த செய்தி