ஆப்நகரம்

அதிகரித்த பச்சை பட்டாணி விளைச்சல் :கொடைக்கானல் விவசாயிகள் மகிழ்ச்சி!

கொடைக்கானல் மலைகிராமங்களில் பச்சை பட்டாணி விளைச்சல் மற்றும் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சிடைந்து உள்ளனர்.

Samayam Tamil 9 Mar 2019, 12:58 pm
கொடைக்கானல் மலைகிராமங்களில் பச்சை பட்டாணி விளைச்சல் மற்றும் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சிடைந்து உள்ளனர்.
Samayam Tamil pea planting


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைக்கிராமங்களான அட்டுவம்பட்டி, வில்பட்டி, மாட்டுப்பட்டி, அடிசரை, பள்ளங்கி உள்ளிட்ட பகுதிகளில். அதிக சுவை மிகுந்த பச்சைப் பட்டாணி அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன, பனிக்காலங்களில் மட்டுமே விளையும் உயர் ரக பச்சை பட்டாணி ரகங்கள் கடந்த இரு மாதங்களில் மலைப்பகுதிகளில் நிலவி வந்த பனி காரணமாக தற்போது அதிக அளவில் விளைச்சல் கண்டுள்ளது.

அத்துடன் கிலோ 32 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை மொத்த விலையில் விற்பனை ஆவதுடன் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பச்சை பட்டாணி பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி