ஆப்நகரம்

கொடநாடு எஸ்டேட் விவகாரம்: நான்கு பேர் கைது

கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

TNN 29 Apr 2017, 10:50 pm
சென்னை: கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil kodanad estate issue four arrested
கொடநாடு எஸ்டேட் விவகாரம்: நான்கு பேர் கைது


நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் எஸ்டேட் பங்களா உள்ளது. அங்கு, காவலில் இருந்த ஓம் பகதூர் என்பவர், கடந்த 23-ம் தேதி நள்ளிரவு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். எஸ்டேட் பங்களாவும் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், அவருடன் காவல் பணியில் இருந்த கிருஷ்ண பகதூர் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவங்களும், அதன் நீட்சியாக நடைபெற்று வரும் சம்பவங்களும் தமிழகத்தையே உலுக்கி எடுத்திருக்கிறது.

படுகாயமடைந்த கிருஷ்ண பகதூரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இக் கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக சந்தேகிக்கப்படும் கனகராஜ் மற்றும் சயான் என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

ஆனால், சேலம் ஆத்தூரில் நடந்த சாலை விபத்தில் கனகராஜ் பலியானார். அதேபோல், கேரள மாநிலம் பாலக்காடு அருகே தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்த சயான் என்பவரும் சாலை விபத்தில் சிக்கினார். இதில், அவரது மனைவி மற்றும் மகள் உயிரிழந்தனர். சயான் படுகாயங்களுடன் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக, தீபு, சதீஷன், சந்தோஷ், உதய குமார் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உறுதிபடுத்தியுள்ளார். எஸ்டேட் பங்களாவில் பணம் எதுவும் கிடைக்காதாதல் ஜெயலலிதா, சசிகலா பயன்படுத்திய 5 கைக்கடிகாரங்கள் மற்றும் 5 கிரிஸ்டல் காட்சி பொருட்களை அவர்கள் கொள்ளையடித்து சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என கருதப்படும், தலைமறைவாக உள்ள 5 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Kodanad estate issue: Four arrested

அடுத்த செய்தி