ஆப்நகரம்

கொடநாடு விவகாரம்: கைதான சயன், மனோஜ் சென்னை அழைத்து வரப்பட்டனர்!

கொடநாடு விவகாரத்தில் கைதான சயன், மனோஜ் ஆகியோர் தனிப்படை காவல்துறையினரால் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

Samayam Tamil 14 Jan 2019, 4:00 pm
கொடநாடு விவகாரத்தில் கைதான சயன், மனோஜ் ஆகியோர் தனிப்படை காவல்துறையினரால் சென்னை அழைத்து வரப்பட்டனர்.
Samayam Tamil jaya-koddanad-1


மறைந்த முதல்வா் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடா்பாக தெகல்கா பத்திரிகையாளா் மேத்யூ சாமுவேல் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் தமிழக முதல்வா் பழனிசாமிக்கு நேரடி தொடா்பு இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அதிமுக தொழில்நுட்பப் பிரிவு மாநில இணை செயலாளர் ராஜன் சத்யா, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் டெல்லியில் பேட்டியளித்த கூலிப்படைத் தலைவர் சயன், மனோஜ், தெகல்கா புலனாய்வு பத்திரிகை முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் சயன், மனோஜ் ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் நேற்று டெல்லியில் கைது செய்தனர். இந்த கைது சம்பவம் குறித்து, மேத்யூ நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘10 நிமிடங்களுக்கு முன்பு நானும், சயன், மனோஜ் ஒன்றாக பேசிக் கொண்டிருந்தோம். அதன் பிறகு செக்டார் 9 துவராகவில் இருந்து புறப்பட்டேன். ஒரு தனியார் வாகனம். அதில் காவல்துறை என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அவர்கள் அதிரடியாக சயன், மனோஜை பிடித்துச் சென்றனர். அவர்கள் முறையாக அழைத்துச் செல்லவில்லை. அவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டெல்லியில் கைது செய்த சயான், மனோஜ் ஆகியோரை தனிப்படை காவல்துறையினர், விமானம் மூலம் இன்று சென்னை அழைத்து வந்தனர். இவா்கள் இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த வழக்கை மத்திய குற்றவியல் காவல் துறையினா் விசாரிப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி