ஆப்நகரம்

உலக கொங்கு தமிழர்கள் மாநாடு மலேசியாவில் அரங்கேறியது

கொங்கு மண்டலத்திலிருந்து உலகம் பூராவும் பரவி வாழ்பவர்களை மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஒன்றாக சங்கமித்து ”உலக கொங்கு தமிழர்கள் மாநாடு” நடைபெற்றது.

TNN 29 Jul 2016, 8:22 pm
கொங்கு மண்டலத்திலிருந்து உலகம் பூராவும் பரவி வாழ்பவர்களை மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஒன்றாக சங்கமித்து ”உலக கொங்கு தமிழர்கள் மாநாடு” நடைபெற்றது.
Samayam Tamil kongunadu munnetra kazhagam conference in malaysia
உலக கொங்கு தமிழர்கள் மாநாடு மலேசியாவில் அரங்கேறியது


இதுகுறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உலக கொங்கு தமிழர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் நமது பண்பாடு, கலாச்சார்த்தை பறைசாற்றும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 1956ல் மலேசியாவில் தோற்றுவிக்கப்பட்ட மலேசியா நாமக்கல் நலன் அபிவிருத்தி மன்றம் 60 ஆண்டுகள் நிறைவடைந்ததால் வைரவிழாவோடு பண்பாடு காப்போம் என்ற மாநாடு நடைபெற்றது.

இதில் மலேசியா, கனடா, லண்டன், அமெரிக்கா, துபாய், ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து கொங்கு தமிழர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக மலேசிய நாட்டின் பிரதமர் நஜீப் ரசாக் கலந்து கொண்டார். இந்த மாநாடு ஜூலை 22 முதல் 24 வரை சிறப்பாக நடைபெற்றது.” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி