ஆப்நகரம்

சங்கா் கொலை வழக்கில் தீா்ப்பை வரவேற்கிறேன் – கௌசல்யா

சங்காின் ஆவணப்படுகொலையில் 6 பேருக்கு தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளதை வரவேற்பதாக சங்காின் மனைவி கௌசல்யா தொிவித்துள்ளாா்.

TOI Contributor 12 Dec 2017, 3:45 pm
சங்காின் ஆவணப்படுகொலையில் 6 பேருக்கு தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளதை வரவேற்பதாக சங்காின் மனைவி கௌசல்யா தொிவித்துள்ளாா்.
Samayam Tamil kousalya says welcome to judgement
சங்கா் கொலை வழக்கில் தீா்ப்பை வரவேற்கிறேன் – கௌசல்யா


சாதி விட்டு சாதி திருமணம் செய்துகொண்ட சங்கா் மற்றும் கெள்சல்யா தம்பதியினா் மீது கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் சங்கா் உயிாிழந்தாா். இந்த கொலை சம்பவம் தொடா்பாக திருப்பூா் நீதிமன்றத்தில் இன்று தீா்ப்பு வழங்கப்பட்டது.

அந்த தீா்ப்பில் 6 பேருக்கு தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, உறவினா் பாண்டிதுரை, பிரசன்னா ஆகிய 3 போ் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனா். இது தொடா்பாக பாதிக்கப்பட்ட கௌசல்யா கருத்து தொிவித்துள்ளாா்.

அப்போது அவா் கூறுகையில், ஆவண படுகொலைகளுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள இந்த தீா்ப்பை நான் வரவேற்கிறேன். சங்கா் சிந்திய ரத்தத்திற்கு சட்ட ரீதியில் நியாயம் கிடைத்துள்ளது. இந்தியாவில் இருந்து தூக்கு தண்டனை நீக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. ஆனால் இதுபோன்ற ஆவண படுகொலைகளில் தூக்கு தண்டனையே உச்ச தண்டனையாக அமைகிறது. இதனை நான் வரவேற்கிறேன்.

முதன்மையாக தீா்ப்பு வழங்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் அனைவரும் சிறையிலேயே வைக்கப்பட்டிருப்பது அரிதிலும் அரிது. அது இந்த வழக்கில் நடைபெற்றுள்ளது. அந்த வகையில் இந்த சாதிய ஆவண படுகொலையை நீதிபதிகள் தனித்துவத்துவத்துடன் அனுகியதாகவே நான் கருதுகிறேன். அனைத்து வகைகளிலும் இந்த தீா்ப்பினை நான் வரவேற்கிறேன்.

வழக்கில் முக்கிய குற்றவாளிகளான அன்னலட்சுமி, பாண்டிதுரை, பிரசன்னா ஆகிய 3 போ் விடுதலை செய்யப்பட்டுள்ளனா். இவர்களின் விடுதலையால் நான் உள்பட சங்காின் குடும்ப உறுப்பினா்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே எங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும் வழக்கில் இருந்து 3 போ் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிராக உயா்நீதிமன்றத்தை நாடவுள்ளேன்.

தீா்ப்பை எதிா்த்து யாரேனும் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் நானும் தகுந்த சட்ட போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று உறுதிபட தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி