ஆப்நகரம்

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் முயற்சியால் சுத்தமான 200 ஆண்டுகள் பழமையான கிணறு

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் மேற்கொண்ட மகத்தான முயற்சி காரணமாக, அங்குள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கிணறு சுத்தமாகியுள்ளது.

TNN 24 Jun 2017, 5:57 pm
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் மேற்கொண்ட மகத்தான முயற்சி காரணமாக, அங்குள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கிணறு சுத்தமாகியுள்ளது.
Samayam Tamil kovai kulangal padhukaapu amaippu cleaned two century old well
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் முயற்சியால் சுத்தமான 200 ஆண்டுகள் பழமையான கிணறு


கொங்கு மண்டலத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கும் பணியில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன்படி, அங்குள்ள சுண்டக்காமுத்துர் பகுதியில் நூற்றாண்டுகள் பழமையான பிரமாண்ட கிணறு உள்ளது. குப்பை கிடங்காகக் காட்சியளித்து வந்த இந்த கிணறை, தூர்வாரும் பணியை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் சிறப்பாகச் செய்ய தீர்மானித்தனர்.

இதற்கான களப்பணியில், 150க்கும் அதிகமான தன்னார்வலர்கள் பங்கேற்று, கடந்த ஒரு வாரமாக முயற்சித்து, அந்த கிணற்றை தூர்வாரி உள்ளனர். 15 நாட்கள் இடைவிடாத முயற்சியின் பலனாக, கிணறு தற்போது பழைய நிலைக்கு மீட்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இனி, அப்பகுதியினருக்கு, மழைக்காலத்தில் நீர் ஆதாரம் பாதுகாக்கப்படும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Kovai Kulangal Padhukaapu Amaippu cleaned two century old well in Coimbatore.

அடுத்த செய்தி