ஆப்நகரம்

காட்டு யானைகள் செய்த சேட்டை, டிரான்பார்மரில் பறந்த தீப்பொறி... வீடியோ உள்ளே!

காடுகள் ஆக்கிரமிப்பால், யானைகளின் வழித்தடங்கள் அழிக்கப்படுகிறது. இதன் காரணமாகச் சமீப நாட்களாகத் திசை மாறி உணவுக்காகக் காட்டில் வாழும் யானைகள் ஊருக்குள் புகுந்து விடுகிறது.

Samayam Tamil 16 Nov 2019, 12:17 pm
கோவை மாவட்டம், பெரியநாயக்கம் பாளையம் அருகே நாயக்கம் பாளையத்தில் ஊருக்குள் 5 காட்டு யானைகள் உணவு தேடி ஊருக்குள் புகுந்தது. இந்த பகுதியில் ஏராளமான வீடுகள் இருக்கின்றது. யானைகளைப் பார்த்துப் பயந்துபோன பொது மக்கள், யானைகள் புகுந்தது குறித்து வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
Samayam Tamil Untitled1


இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், வெடிகள் வெடித்து யானைகளைக் காட்டுக்குள் துரத்த முயன்றனர். அப்போது, அந்த யானைகள் அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதியதில் மின்சாரக் கம்பிகள் ஒன்றோடு ஒன்று மோதி, தீப் பொறி ஏற்பட்டது.

சாலை விபத்துகள் மரணம்: தமிழ்நாட்டுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

இந்த நிகழ்வை அந்த பகுதியில் வசித்து வரும் மக்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். அந்த வீடியோவில் மக்கள் பயந்து அலறும் சத்தங்கள் கேட்கிறது. சமீபத்தில் அரிசிகளைத் தேடி வந்த அரிசி ராஜா என்ற காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. அரிசி ராஜாவை வனத்துறையினர் போராடி, மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். இப்போது அதை வளர்ப்பு யானையாக மாற்ற, வனத்துறையினர் கோவை டாப் சிலிப் பகுதிக்குக் கொண்டு சென்று பராமரித்து வருகின்றனர்.

சமீப காலமாக அதிகளவில் கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வருகிறது. இதுகுறித்து தொடர்ந்து வீடியோக்கள் வெளியாகி வருகிறது.

போலீஸ் ஸ்டேஷனில் கல்யாணம் எல்லாம் பழசு... ஹாஸ்பிட்டலில் மேரேஜ் தான் இப்போ புதுசு!!

காடுகளை மனிதர்கள் அதிகளவில் ஆக்கிரமித்து கட்டிடங்கள் எழுப்பி வருவதால், காட்டு மிருகங்கள் உணவுக்காகவும், நீருக்காகவும் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குத் திசை மாறி வருகிறது. இந்த நிலையைப் பத்திரிகைகள் தொடங்கி பொது மக்களும் ஊருக்குள் காட்டு யானை புகுந்து விட்டது எனத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் என சமூக செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி