ஆப்நகரம்

தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்திற்கு மதுரை கிராமங்கள் தேர்வு

மதுரையில் உள்ள கோவில்பாப்பாகுடி மாவட்டம் தேசிய நகரப்புற வாழ்வாதார இயக்க திட்டத்திற்கு தேர்வாகியுள்ளது. அங்கு ரூ. 100 கோடி மதிப்பிலான வளர்ச்சிக்கட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

Samayam Tamil 10 Jan 2019, 10:33 pm
மதுரையில் உள்ள கோவில்பாப்பாகுடி மாவட்டம் தேசிய நகரப்புற வாழ்வாதார இயக்க திட்டத்திற்கு தேர்வாகியுள்ளது. அங்கு ரூ. 100 கோடி மதிப்பிலான வளர்ச்சிக்கட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
Samayam Tamil தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்திற்கு மதுரை கிராமம் தேர்வு


இதுதொடர்பாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் அலுவலர் எஸ்.பி. அமிர்த் பேசும்போது, மதுரையில் கோவில்பாப்பாகுடி பகுதியில் மொத்த 16 கிராமங்களில் வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் தொடர்பான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.

கோவில்பாப்பாகுடி-க்கான வளர்ச்சிப் பணிகள் 2020ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ. 30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து மீதமுள்ள ரூ. 70 கோடி பணம் அடுத்தடுத்த திட்டங்கள் மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி