ஆப்நகரம்

கிருஷ்ணகிரி: அரசுப்பள்ளி ஆசியர் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

கிருஷ்ணகிரியில் பட்டபகலில் அரசுப்பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை, 1.50 லட்சம் பணம் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.

Samayam Tamil 5 Jan 2019, 2:56 pm
கிருஷ்ணகிரியில் பட்டபகலில்அரசுப்பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை, 1.50 லட்சம் பணம் கொள்ளைசம்பவம் நடைபெற்றுள்ளது.
Samayam Tamil rob


கிருஷ்ணகிரி அருகே ஸ்ரீராம் நகரில் வசிப்பவர் பெருமாள்.இவர்கிருஷ்ணகிரி சப்ஜெயில் ரோட்டில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி கீதாகிருஷ்ணகிரி நகரில் உள்ள பாப்பாரப்பட்டி அரசுப்பள்ளியில்ஆசிரியராகபணியாற்றி வருகின்றார்.இவர்கள் இருவரும் தினமும் காலையில் பள்ளிக்கு சென்று வீட்டு மதிய உணவுக்கு மீண்டும் வீட்டிற்க்கு வருவதுவழக்கமாக கொண்டுள்ளனர்.

அதன்படிநேற்றுகாலை வழக்கம்போல் தங்களது வீட்டை பூட்டிவீட்டு இருவரும் பள்ளிக்குசென்றுள்ளனர். மதியம்உணவுக்கு இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டின் முன்புற கதவை திறந்து உள்ளே சென்றபோது பின்புற கதவு உடைக்கபட்டு இருந்து உள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கபட்டு, அதிலிருந்த 25 சவரன் தங்க நகைகள் 1.50 லட்சம் ரொக்கபணம் மற்றும் மூன்று கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்து தெரியவந்தது.

வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த கொள்ளை கும்பல் பட்டப்பகலில் வீட்டின் மேல்மாடி வழியாக சென்று பின்புற கதவை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டிருந்தது தெரியவந்தது.

கொள்ளை சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கபட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் உடன் விசாரணை நடத்தினர். கொள்ளை கும்பல் வீட்டில் திருடி சென்று விட்டு தடயங்களை அழிக்கும் கையில் மிளகாய் பொடியை மீதும் தூவி விட்டு சென்றுள்ளனர்.இதனால் போலீசாருக்கு தடயங்கள் சேகரிப்பதில் சீரம்ம ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி