ஆப்நகரம்

கும்பகோணம் வீர சைவ மடத்தின் புதிய மடாதிபதிக்கு இன்று பட்டாபிஷேகம்!

தஞ்சாவூர்: பசவமுருக சாரங்க தேசிதேந்திர மகா சுவாமிகள் புதிய மடாதிபதி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

Samayam Tamil 29 Jan 2019, 7:08 pm
கும்பகோணம் மகாமகம் குளம் அருகில் உள்ள வீர சைவ மடம் கர்நாடகாவில் உள்ள லிங்காயத்து சமூகத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த மடத்திற்கான சொத்துக்கள் தஞ்சை, கர்நாடகாவின் பல பகுதிகளிலும் உள்ளன.

ஏற்கனவே இங்கு மடாதிபதியாக இருந்த நீலகண்ட சாரங்க தேசிகேந்திர மகா சுவாமிகள் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக குற்றம் கூறி, அவரை இம்மடத்தின் நிர்வாகக் குழு பதவியிலிருந்து நீக்கியது.

புதிய மடாதிபதியாக கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா என்ற இடத்தில் உள்ள வீர சைவ மடத்தின் இளைய மடாதிபதிகளில் ஒருவரான பசவ முருக தேசிகேந்திர மகா சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டார்.

இவரது பட்டாபிஷேக விழா இன்று கும்பகோணம் வீர சைவ மடத்தில் நடைபெற்றது. கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள முருக மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருக சுவாமிகள் முன்னிலையில் புதிய மடாதிபதிக்கு பட்டம் சூட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி