ஆப்நகரம்

சுந்தரம் விவகாரத்தில் அபிராமி எங்கள் பேச்சை மதிக்கவில்லை: அபிராமி தந்தை பேட்டி..!!

குழந்தைகளைக் கொலை செய்வதற்கு 2 நாட்களுக்கு முன் சுந்தரத்தின் வீட்டிற்கே சென்று அபிராமி தங்கியிருந்ததாக என அவரது தந்தை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 8 Sep 2018, 11:42 am
குழந்தைகளைக் கொலை செய்வதற்கு 2 நாட்களுக்கு முன் சுந்தரத்தின் வீட்டிற்கே சென்று அபிராமி தங்கியிருந்ததாக என அவரது தந்தை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil abirami-cover-pic
சுந்தரம், அபிராமி உறவு குறித்து அபிராமி தந்தை பரபரப்பு பேட்டி


சென்னை குன்றத்தூரை சேர்ந்த வங்கி பணியாளரான விஜய் என்பவரின் மனைவி அபிராமி பிரியாணி கடை வைத்திருக்கும் சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் தனது இரு குழந்தைகளுக்கும் பாலில் விஷம் வைத்து கொலை செய்தார்.

இதையடுத்து நாகர்கோவிலில் வைத்து கைது செய்யப்பட்ட அபிராமி மற்றும் அவரது காதலன் சுந்தரம் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தனது மகளின் செயல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவரது தந்தை சவுந்தரராஜன், 'அபிராமி செய்த தவறுக்கான தான் அவள் சிறை தண்டனையில் இருக்கிறாள்.

அவளுக்காக ஜாமீன் கேட்டு செல்ல நாங்கள் தயாராக இல்லை. 8 ஆண்டுகளுக்கு முன்னர் அவள் விஜய்யை காதலிப்பதாகக் கூறினார். ஆனால் விஜய்யின் பெற்றோர் இதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை.

அதனால் நாங்களே அவளுக்கும் விஜய்க்கும் திருமணம் செய்து வைத்தோம். அபிராமியை நன்றாகப் பார்த்து கொள்ள வேண்டும் என்று விஜய் கஷ்டப்பட்டு உழைத்தார்' என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசியுள்ள அவர், 'இரண்டு குழந்தைகள் அழகான குடும்பம் என்று அவர்களின் வாழ்க்கையும் நன்றாகத் தான் போய்க்கொண்டிருந்தது.சுந்தரம் விஷயத்தில் அவளது போக்கு தவறு எனப் பல முறை அவளுக்கு அறிவுரை கூறி இருக்கிறேன்.

ஆனால் அதை அவள் கேட்கவில்லை. இந்தச் சம்பவம் நிகழ்வதற்கு முன் கூட சுந்தரத்தின் வீட்டிற்கே சென்று இரண்டு நாட்கள் அங்கேயே தங்கிவிட்டாள். அப்போதே போலீசிடம் போயிருந்தால் கூட என் பேரப்பிள்ளைகள் இன்று உயிருடன் இருந்திருக்குமே! என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி