ஆப்நகரம்

அரசராகி விட்டார் ஸ்டாலின்: ட்விட்டரில் குஷ்பு வாழ்த்து

இளவரசர் ஸ்டாலின் தற்போது அரசாகிவிட்டார் என்றும் ஸ்டாலினின் அடுத்தடுத்த நகர்வுகளை தமிழக மக்கள் உற்றுநோக்கி வருவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Samayam Tamil 28 Aug 2018, 4:19 pm
இளவரசர் ஸ்டாலின் தற்போது அரசாகிவிட்டார் என்றும் ஸ்டாலினின் அடுத்தடுத்த நகர்வுகளை தமிழக மக்கள் உற்றுநோக்கி வருவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Samayam Tamil mk_stalin_cover_pic
இளவரசர் ஸ்டாலின் அரசனாகி விட்டார்: குஷ்பு வாழ்த்து


சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாலர் க. அன்பழகன், புதிய தலைவராக மு.க.ஸ்டாலினையும், பொருளாளராக துரைமுருகனையும் அறிவித்தார்.

திமுக-வின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்டாலினுக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு, ”ஸ்டாலின் இளவரசர் அரசராகிவிட்டார். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள். தமிழக மக்கள் தங்களின் எதிர்காலமாக உங்களைப் பார்க்கிறார்கள்”.

”விரைவில் மாநிலத்தை வழிநடத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம், நாம் ஒன்றாக இணைந்து நின்றோம். தொடர்ந்து இணைந்திருப்போம், வாழ்த்துகள்'' என்று பதிவில் குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.

நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், திமுக உடன் காங்கிரஸ் கூட்டணி ஏற்படுத்திக்கொண்ட பிறகு, திமுக கழகத்தினரோடு குஷ்பு நட்பு பாராட்டி வருபவராக பார்க்கப்படுகிறார்.

எனினும் அவ்வப்போது திமுக கட்சியை ஆதரித்தும், எதிர்த்தும் குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி