ஆப்நகரம்

குஷ்பூவுக்கு முக்கிய பொறுப்பு: காங்கிரஸ் மேலிடம் முடிவு!

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பூவுக்கு முக்கிய பொறுப்பை வழங்க அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Samayam Tamil 11 Oct 2020, 4:30 pm
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளரான குஷ்பூ, தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபடாமல் தேசிய அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். ஆனால், தற்போது அதிலும் ஆர்வம் காட்டாமல் உள்ளதால், விரைவில் அவர் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதற்கு குஷ்பூ காட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil குஷ்பூ
குஷ்பூ


இருப்பினும், கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பூவுக்கு, தற்போது வரை அவருக்கு சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பளிக்காததால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறி குஷ்பூ பாஜகவில் சேரப் போகிறார் என்ற தகவல்கள் கூடுதலாக பரப்பப்பட்டது. அவர் பாஜகவில் இணைந்தால் வரவேற்பதாக பாஜக மாநில தாஇவர் எல்.முருகனும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, சென்னை வந்த தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவிடம், தமிழக காங்கிரசில் நடக்கும் எந்த நிகழ்ச்சிக்கும், தன்னை அழைப்பதில்லை என குஷ்பூ குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக டெல்லி சென்ற குஷ்பூ, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் கே.சி. வேணு கோபால் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசலா? - பொன்.ராதாகிருஷ்ணன் பதில்!

இந்த நிலையில், குஷ்பூவுக்கு தமிழக அளவில் முக்கிய பொறுப்பு வழங்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்களாக விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம், வசந்தகுமார் உள்ளிட்ட 5 பேர் நியமிக்கப்பட்டனர்.

அதில், பெண்கள், சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்று அப்போதே குற்றம் சாட்டப்பட்டது. இந்த சூழலில் கொரோனாவால் வசந்தகுமார் உயிரிழந்துள்ளதால், காலியாக உள்ள அவரது செயல் தலைவர் பதவி குஷ்பூவுக்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி