ஆப்நகரம்

'தெருவுக்கு தெரு பாஜக கொடிதாங்க, எவரையும் எதிர்த்து போட்டியிட தயார்' - குஷ்பூ பளிச்

2021 சட்ட சபை தேர்தலில் கட்சி தலைமை சொன்னால் யாரை எதிர்த்தும் போட்டியிட தயார் என்று தஞ்சையில் குஷ்பூ பேட்டி

Samayam Tamil 10 Jan 2021, 5:52 pm
தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் 'நம்ம ஊரு பொங்கல்' என்ற பெயரில் பாஜக பொங்கல் வைத்து வருகிறது. மேலும், திருவிழா மற்றும் கலை நிகழ்ச்சிகளை தமிழக பாஜக நடத்தி வருகிறது. இந்த நிலையில், மதுரை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் தமிழக பாஜக பொங்கல் பண்டிகையை கொண்டாடியது.
Samayam Tamil file pic


இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் குஷ்பூ பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பூ, '' தமிழகத்தில் பாஜக எங்கு இருக்கிறது என்று கேட்டனர். ஆனால், இப்போது தெருவுக்கு தெரு பாஜக கொடி பறக்கிறது.

யாரும், யாரையும் வழி நடத்தவேண்டிய அவசியம் இல்லை. எதிர் வரும் சட்ட சபை தேர்தலில் ஸ்டாலினை மட்டுமின்றி யாரை வேண்டுமானாலும் எதிர்த்து போட்டியிட நான் தயார். தமிழகத்தில் வரும் தேர்தலில் பாஜக எந்தனை இடங்களில் போட்டியிடும் என்பதை மாநில தலைவர் எல். முருகன்தான் அறிவிப்பார் என கூறினார்.

நம்ம ஊரு பொங்கல்; தமிழக பாஜகவின் அடுத்த வியூகம்!

தொடர்ந்து ' ஒரு அப்பனுக்கு பிறந்த முருகன் தமிழ் கடவுள் என்றால் விநாயகர் இந்தி கடவுளா என்ற திருமாவளவன் கருத்துக்கு பதிலளித்தவர், '' தன் மீது ஊடக வெளிச்சம் படுவதற்காகவே திருமாவளவன் அப்படி சர்ச்சையாக பேசி வருகிறார். அதை விட்டுவிட்டு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யும் கொள்கையை அவர் பின்பற்றலாம்'' என இவ்வாறு கூறினார்.

அடுத்த செய்தி