ஆப்நகரம்

சீசன் களைகட்டிய குற்றாலம்

குற்றால சீசனை ஒட்டி, ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

TNN 18 Jul 2016, 1:30 pm
தென்காசி: குற்றால சீசனை ஒட்டி, ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.
Samayam Tamil kutralam session starts people rushed in queue
சீசன் களைகட்டிய குற்றாலம்


திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் மழை பெய்யாததால், அருவிகளில் போதிய தண்ணீரின்றி காணப்படுகிறது. இருப்பினும் விடுமுறை நாள் என்பதால், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர்.

மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையுடன் காணப்பட்டனர். ஏராளமானோர் குடும்பத்துடன் படகுகளில் சவாரி செய்தனர். அதிகப்படியான சுற்றுலா பயணிகளின் வருகையால் குற்றாலம் திருவிழாக் கோலமானது.

சுற்றுலா பயணிகளின் வருகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி