ஆப்நகரம்

அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கவசம் பற்றாக்குறை: கனிமொழி ட்வீட்!!

அரசு மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு கவசம், கையுறை, முகமூடிகள் வழங்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

Samayam Tamil 23 Mar 2020, 12:23 pm
அரசு மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு கவசம், கையுறை, முகமூடிகள் வழங்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
Samayam Tamil கனிமொழி எம்பி


அரசு மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ''அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கவசம், கையுறை, முகமூடிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறையாக இருக்கிறது என்ற செய்தி வருகிறது.

கொரோனா: நாமக்கல் - ஈரோடு மாவட்ட எல்லைகள் மூடல்!

தமிழக அரசு இந்தப் பற்றாக்குறையை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களைக் காக்கும் சேவையில் மருத்துவர்கள், செவிலியர்கள் ஈடுபட்டிருக்கும் வேளையில், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை தங்கு தடையின்றி தேவையான அளவு கிடைக்கச் செய்வது அரசின் தலையாய கடமை'' என்று தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு எதற்காக? இன்று கொரோனா வராதா? "பொறுப்பில்லாத ஆட்சியாளர்கள்"
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, 2,05,396 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 9,424 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 2,069 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது 54 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 443 பேரின் மாதிரிகள் சோதிக்கப்பட்டதில், 352 நெகடிவ் ஆகவும், 7 பாசிடிவ் ஆக இருப்பதாகவும், ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

அடுத்த செய்தி