ஆப்நகரம்

வகுப்பறையின் மேற்கூரை இடிந்ததால் மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்!

கரூர் மாவட்டம் தோகைமலை அரசு மேல் நிலைப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 1400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

Samayam Tamil 12 Jul 2019, 2:19 pm
தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளில் வகுப்பறையின் மேற்கூரை இடிந்ததால், மாணவ, மாணவிகள் மரத்தடியில் அமா்ந்து படிக்கும் அவலம் நிலவி வருகிறது.
Samayam Tamil வகுப்பறையின் மேற்கூரை இடிந்ததால் மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்!
வகுப்பறையின் மேற்கூரை இடிந்ததால் மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்!


கரூர் மாவட்டம் தோகைமலை அரசு மேல் நிலைப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 1400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலில், பள்ளியின் சுற்றுச்சுவர் மீது மரம் சரிந்து விழுந்ததில், சுவர் இடிந்து சேதமடைந்தது.

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் வளர்மதி, பொதுப்பணித்துறையில் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து நான்கு மாதத்திற்கு முன்னதாக சுற்றுச்சுவரை மறுசீரமைப்பு செய்ய இரண்டு லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் இன்று வரை பணிகள் துவங்கவில்லை.

பொதுப்பணித்துறை அதிகாரியிடம் கேட்டால் டெண்டா் விடுகிறோம் என்று நாள் கடத்தி வருகின்றனர். ஆனால் மாலை, இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தில் மது அருந்துதல், சட்டத்திற்கு புறம்பான செயல்கள், ஆடுகள், பன்றிகள், நாய்கள் ஆகியவைகள் உள்ளே சென்று அசிங்கப்படுத்தி வருகின்றது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே அரசு அதிகாரிகள் இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் 1996−97 ஆம் ஆண்டு கரூா் மாவட்ட MP யாக இருந்த நாட்ராயன் அவா்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ 3.5 லட்சத்தில் இரண்டு வகுப்பறை கொண்ட கட்டிடம் கட்டி கொடுத்தார். அந்த கட்டிடம் தற்போது மேற்கூரை இடிந்து கம்பி தெரியும் அளவில் காணப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் மரத்தடியில் மண்ணில் அமா்ந்து பயிலும் நிலை உருவாகியுள்ளது.

எனவே மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, புதிய கட்டிடம் கட்டித் தரவேண்டும் என்று தலைமையாசிரியர் வளா்மதி கோரிக்கை வைத்துள்ளார்.

அடுத்த செய்தி