ஆப்நகரம்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இன்று முதல் லட்டு... தொடங்கி வைக்கிறார் எடப்பாடி

தற்போது ​​மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திலும் பிரசாதமாக லட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 8 Nov 2019, 9:01 am
கோயில்களில் பிரசாதம் வழங்கும் பழக்கம் தொன்று தொட்டு நடந்து வரும் நடைமுறை. ஆனால் காலமாற்றத்திற்கு ஏற்றபடி பிரசாதமும் மாறி வந்திருக்கிறது என்பது கண்கூடு. அந்த வகையில் பிரசாதத்திற்கு பெயர் பெற்ற தலம் என்றால் எலோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது திருப்பதி ஏழுமலையான் கோயில்தான்.
Samayam Tamil meenakshi amman temple


இதேபோல தமிழகத்தில் சிறப்பான கோயில்கள் பலவும், பிரத்யேகமான பிரசாதங்களைக் கொண்டிருந்தாலும் திருப்பதி லட்டு போல வேறொன்றை பார்ப்பது அரிதாகவே இருந்து வந்தது. இந்நிலையில்,

வடகிழக்கே அசுர வேகத்தில் நகரும் ‘புல்புல்’ - தீவிர புயலாக மிரட்டும் சூறாவளி!


தற்போது மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திலும் பிரசாதமாக லட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு அனுதினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர்.

கிளம்பியாச்சு... கிளம்பியாச்சு...; இனி ஓபிஎஸ்சை அமெரிக்காவில் தான் பார்க்க முடியும்!

மீனாட்சி அம்மனை தரிசித்துவிட்டு, மூலவரான சொக்கநாதரை தரிசிக்கச் செல்லும் வழியில் கோயிலுக்குள் அமைந்திருக்ககூடிய முக்குறுணி விநாயகர் சந்நிதி அருகே, பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

காலையில் கோயில் நடை திறந்தது முதல், இரவு நடை சாத்தும் வரை பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்படும். இந்த திட்டம் இன்றுமுதல் அமலுக்கு வர இருக்கிறது. இதனைக் காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

அடுத்த செய்தி