ஆப்நகரம்

மேக மூட்டத்துக்கு நடுவே நடனமாடி நாற்று நடும் புதுக்கோட்டை விவசாயிகள்..! வீடியோ

புதுக்கோட்டை அருகே நாற்று நட்டுக்கொண்டே சினிமா பாடலுக்கு நடனமாடும் விவசாயிகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 26 Oct 2020, 6:21 pm
கிராமங்களில் நாற்று நடும் போது களைப்பு தெரியாமல் இருக்க பெண்கள் பாட்டு படுவார்கள் என்பதை நாம் அறிந்ததுண்டு. அதை நம்மில் நிறைய பேர் நேரில் பார்த்தது கிடையாது. அதற்கு வாய்ப்பளிக்கும் விதமாக புதுக்கோட்டை விவசாயிகள் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்று நடமாடி நாற்று நடும் நிகழ்வினை வீடியோ மூலம் இந்த செய்தியில் பார்க்கலாம்.
Samayam Tamil farmers dance


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த மழையூர் என்ற கிராமத்தில் விவசாயிகள் நாற்று நடும் பணியை செய்து வந்தனர். அப்போது, வயலில் இருந்த டிராக்டரில் ரேடியோவில் சினிமா பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.

அந்த பாடலுக்கு நடனம் ஆடியாவரே விவசாயிகள் உற்சாகமாக நாற்று நட்டனர். ஒரு சில சினிமாவில் விவசாயிகள் வேலை பளுவை போக்குவதற்காக கிராமத்து பாடலை பாடிக்கொண்டே நாற்று நடும் காட்சிகளை நாம் பார்த்திருப்போம்.


அரசு கலைக் கல்லூரி கலந்தாய்வு நாளைத் தொடங்குகிறது...

குறிப்பாக கிராமங்களில் இருப்பவர் அந்த நிகழ்வுகளை நேரில் பார்த்த அனுபவம் இருக்கும். நகர்ப்புற வாசிகளுக்கு அந்த வாய்ப்புகள் மிக குறைவுதான். புதிய வேளாண் சட்டம், நெல் கொள்முதல் பிரச்சினைகள் உள்ளிட்ட சங்கடங்களுக்கு மத்தியில், நம் விவசாயிகள் நடனமாடி நாற்று நடும் நிகழ்வு, காண்பதற்கே மிகவும் மகழ்ச்சி அளிக்கிறது.

அடுத்த செய்தி