ஆப்நகரம்

திமுக பிரமுகருக்கு கேக் ஊட்டிய திருவாரூர் பெண் இன்ஸ்பெக்டரால் அதிர்ச்சி!

திமுக பிரமுகருக்கு, கேக் ஊட்டிய போலீஸ் இன்ஸ்பெக்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 26 May 2018, 8:53 pm
திருவாரூர்: திமுக பிரமுகருக்கு, கேக் ஊட்டிய போலீஸ் இன்ஸ்பெக்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil Inspector Jayanthi
கேக் ஊட்டிய பெண் இன்ஸ்பெக்டர்


திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றிய திமுக மாணவர் அணி அமைப்பாளராக சிவச்சந்திரன் உள்ளார். இவர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து, வடுவூரில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து வடுவூர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்தார். அன்றைய தினம் சிவச்சந்திரனுக்கு பிறந்தநாள் என்று போலீசாரிடம் கூறியுள்ளார்.

அதை அறிந்த திமுகவினர் சிவச்சந்திரனுக்கு பிறந்தநாள் கேக் வாங்கி, காவல் நிலையத்திலேயே கொண்டாடியுள்ளனர். அப்போது இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார், சிவச்சந்திரனுக்கு கேக் ஊட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் பெண் இன்ஸ்பெக்டரின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இந்த சம்பவம் குறித்து மன்னார்குடி டிஎஸ்பி அசோகன் தலைமையில் விசாரணை நடத்த, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த இன்ஸ்பெக்டர் கருவாக்குறிச்சியில் சீருடையில் இருந்தவாறே அதிமுக கொடியை ஏற்றி சர்ச்சைக்கு ஆளானவர்.

Lady Police inspector gave birthday cake to DMK prisoner in Tiruvarur.

அடுத்த செய்தி