ஆப்நகரம்

சாத்தனூர் அணையில் அதிர்ச்சி - செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்!

செங்கம் சாத்தணூர் அணை நீர்பிடிப்புப் பகுதியில், வளர்ந்து வரும் லட்சக்கணக்கான மீன்கள் திடீரென உயிரிழந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Samayam Tamil 3 May 2019, 8:18 pm
திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் மிக முக்கியமான இடம் சாத்தனூர் அணை. தென்பெண்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணையின் மொத்த கொள்ளளவு 119 அடியாக உள்ள நிலையில், தற்போதைய நீர் இருப்பு 70 அடியாக மட்டுமே இருந்து வருகிறது.

அணையில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு நகரங்களுக்கு குடிநீர் அத்தியாவசியமாக விளங்கி வருகின்றது. செங்கம் அடுத்த போயம்பள்ளி தண்டா என்ற இடத்தில் செங்கம் நகர மக்களுக்கு கூட்டு குடிநீர் திட்டத்திற்கு சாத்தனூர் அணையிலிருந்து நீர் ஏற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செங்கம் நகர மக்களுக்கு குடிநீர் எடுக்கும் இடத்திலிருந்து, சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவு வரையில் அணையில் வளர்க்கப்பட்டு வரும் மீன்கள், கடந்த இரண்டு நாட்களாக பல லட்சக்கணக்கில் இறந்து மிதந்து வருகின்றது.

அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் மாடு மேய்ச்சலுக்காக சென்றவர்கள், லட்சக்கணக்கான மீன்கள் இறந்து கிடப்பதை பார்த்து, சாத்தனூர் அணை உதவி பெறியாளர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும், இதுவரையிலும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்க்கு சென்று பார்க்கவில்லை என குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் கூட்டு குடிநீர் ஏற்றும் பகுதிக்கு அருகில் மீன்கள் இறந்து கிடப்பதால், சமூக விரோதிகள் யாரேனும் தண்ணீரில் ஏதாவது கலந்துள்ளார்களா என தெரியவில்லை எனவும், உடனடியாக அதிகாரிகள் தண்ணீரை சோதனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி