ஆப்நகரம்

நில அளவையாளர் படுகொலை :வைரலாக பரவும் கொலையாளியின் வாட்ஸ் அப் ஆடியோ

ஓசூரைச் சேர்ந்த நில அளவையாளர் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் முக்கிய குற்றவாளி அனுப்பியுள்ள வாட்ஸ் அப் ஆடியோ சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

TNN 9 Jun 2016, 12:18 pm
கடந்த மே 28-ஆம் தேதி சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகில் கார் ஒன்று தீப்பற்றி எறிவைதையும், அங்கிருந்து இருவர் தப்பித்து ஓடியதையும் கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.இதனையடுத்து ​தப்பி ஓடிய இருவரில் சக்தி வேல் என்பவனை விரட்டிப்பிடித்த காவல்துறையினர்,காருக்குள் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டுள்ளதையும் கண்டறிந்தனர்.
Samayam Tamil land surveyors murderer surrenders on whatsapp
நில அளவையாளர் படுகொலை :வைரலாக பரவும் கொலையாளியின் வாட்ஸ் அப் ஆடியோ


சக்திவேலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் ஒசூரைச் சேர்ந்த குவளைச் செல்வன் என்பதும், அவர் ஒசூர் நகராட்சியில் நில அளவையாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. கள்ளத்தொடர்பு விவகாரம் காரணமாக கூலிப்படையை ஏவி அஸ்ரப் அலி இஸ்ரமுல்லா என்பவர் கொலை செய்ததும் தெரியவந்தது.

இந்நிலையில் தலைமறைவாக உள்ள இஸ்ரமுல்லா அப்பப்போது வாட்ஸ் அப் மூலம் வீடியோக்களை அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.சில நாட்களுக்கு முன்பு காவல்துறை நிர்பந்தத்தால், தான் தலைமுறைவாக இருப்பதாக வாட்ஸ் அப் வீடியோ அனுப்பிய இஸ்ரமுல்லா, தற்போது மற்றொரு வாட்ஸ் அப் ஆடியோவை அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கிருஷ்ணகிரி டி.எஸ்.பி முன் நாளை சரணடைய இருப்பதாகவும், அதுவரை தான் உயிரோடு இருப்பேனா என தெரியாது எனவும் அவர் அந்த ஆடியோவில் தெரிவித்துள்ளார்.தற்போது இந்த ஆடியோ சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி