ஆப்நகரம்

இலங்கை கடற்படையினர் அத்துமீறல்

தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

TNN 4 Oct 2016, 8:38 am
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil lankan navy arrest 5 tn fishermen
இலங்கை கடற்படையினர் அத்துமீறல்


புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனத்தில் இருந்து நேற்று சுமார் 76 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது கோபுரத் தீவு பகுதியில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டும் இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது. மேலும், மீனவர்களின் விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

சர்வதேச எல்லைப்பகுதியில் தொடரும் மீனவர்கள் பிரச்னை குறித்து மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Sri Lankan Navy detained 5 TamilNadu Fishermen near Gopuratheevu.

அடுத்த செய்தி