ஆப்நகரம்

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 14 Jul 2016, 11:35 am
சென்னை: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil lankan navy attacked tn fishermen late night
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்


இலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்படும் மீனவர்கள், கடந்தாஹ் 2 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியதுடன் விரட்டியடித்துள்ளனர்.

இந்நிலையில் மீனவர்கள் நேற்றிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துகொண்டிருந்தபோது அங்கு சுமார் 20க்கும் மேற்பட்ட ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது நடத்திய தாக்குதலில் விசைப்படகுகள் சேதமடைந்தன. இதனால் குறைந்த மீன்களோடு கரை திரும்பியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல்கள் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா-இலங்கை சர்வதேச கடல் எல்லைப்பகுதியில் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, சிறைப்பிடிப்பது, உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நிரந்திர தீர்வு காண வேண்டும் என மத்திய, மாநில அரசுகளிடம் மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அடுத்த செய்தி