ஆப்நகரம்

சென்னையில் பிரபல பெண் தொழிலதிபர் ரீட்டா தற்கொலை.!! பரபரப்பில் நுங்கம்பாக்கம்..

சென்னை மாவட்டத்தில் கார் விற்பனை தொழிலை நடத்தி வந்த ரீட்டா ஜானகி லங்காலிங்கம் என்ற பெண் தொழிலதிபர் இன்று தனது வீட்டில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

Samayam Tamil 12 Sep 2019, 1:38 pm
சென்னை நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையில் வசித்து வருபவர் ரீட்டா ஜானகி. இவர் பிரபல கார் நிறுவனமான லேன்சன் டொயோட்டா நிறுவன இணை இயக்குனராவர். இவரது வீட்டில் சூப்பர்வைசராக பணிபுரிபவர் ஏசுபாதம். இவர் இன்று காலை 9 மணி அளவில் ரீட்டாவின் வீட்டிற்கு வேலை நிமித்தமாக வந்திருக்கிறார். இந்நிலையில் தொழிலதிபர் ரீட்டா தனது அறையில் தூக்கில் தொங்கியதை கண்ட ஏசுபாதம் அதிர்ச்சியடைந்துள்ளார்.
Samayam Tamil 1


பதறிப்போன இவர் உடனே நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவலை தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து விரைந்த போலீசார் ரீட்டாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். தொழிலதிபரான இவர் திடீரென்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலையை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதில், சில நாட்களாக ரீட்டா ஜானகிக்கும் அவரது கணவருக்கும் சண்டை இருந்து வந்துள்ளதாகவும், அதனால் கணவர் வீட்டை விட்டு வெளியில் தங்கியுள்ளதாகவும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது.

இதன் அடிப்படையிலும் மற்றும் தமிழகத்தில் ஆட்டோமொபைல் விற்பனை மந்தமான நிலையில், தொழில் வீழ்ச்சி அடைந்ததால் கூட விரக்தியில் தற்கொலை செய்துகொண்டாரா என்ற பலகோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி