ஆப்நகரம்

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு முடிந்தது

பான் கார்டுடன் ஆதர் எண்ணை இணைக்க இன்றே இறுதிநாள் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

TNN 30 Jun 2017, 4:54 pm
பான் கார்டுடன் ஆதர் எண்ணை இணைக்க இன்றே இறுதிநாள் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
Samayam Tamil last day to link aathar card and pan card
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு முடிந்தது


ஏற்கனவே அரசு வழங்கும் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. எரிவாயு மற்றும் வங்கி கணக்கு இப்படி எல்லா சேவைகளுகும் ஆதார் கார்டை கட்டாயப்படுத்தியுள்ளது தவறான வழியில் முதலீடு செய்யப்படும் பணத்தை தடுக்கவே இதை மத்திய அரசு செயல்படுத்தியிருக்கிறது. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கட்டாயப்படுத்தப்பட்ட நிலையில் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு இன்று முதல் நிறைவடைகிறது .

உச்சநீதிமன்ற உத்தரவு:

இதைமுன்னிட்டு தொடங்கப்பட்ட வழக்கை நீதிபதிகள் விசாரித்தபோது பலருக்கு ஆதார் கார்டு இன்னும் கிடைக்காததால் அவர்களுக்கு இந்த கட்டுபாடுகள் செயல்படாது என்று தீர்ப்பளித்துள்ளது.

இவை இண்டும் இருந்தும், இன்னும் இணைக்கவில்லை என்றால் கவலை வேண்டாம் இதோ அதற்கான வழிகள்:

⦁ வருமான வரி இணையத்தில் பதிவு செய்யவும்
⦁ வெப்ஸைட்டின் மேல் பகுதியில் உள்ள ‘ profile setting ‘ கிளிக் செய்யவும்
⦁ இப்போது உங்கள் பர்சனல் தகவலை கொடுக்கவும்
⦁ நீங்கள் கொடுத்த விவரங்கள் பொருத்தமாக இருந்தால் ‘LINK NOW ‘ கிளிக் செய்யவும்
⦁ கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ன வென்றால் இரு அட்டைகளில் உள்ள விவரங்கள் ஒரே மாதிரியான தகவலாக இருத்தல் வேண்டும்
⦁ குறுஞ்செய்தி மூலமாகவும் இணைக்க முடியும்
⦁ 567678 அல்லது 56161 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் இரு அட்டையின் விவரங்களும் இணைக்கப்பட்டுவிடும்.
⦁ ஆனால் நீங்கள் குறுஞ்செய்தி அனுப்பும் தொலைப்பேசி எண் ஆதார் கார்டில் கொடுக்கப்பட்ட எண்ணாகத்தான் இருக்க வேண்டும்
⦁ பான்கார்டு மற்றும் ஆதர் கார்டுளில் ஒரே மாதிரியான விவரங்கள் இருக்கவேண்டும் அப்படி இல்லாவிட்டால் இரு அட்டைகளும் இணையாது
⦁ ஒரேமாதிரி தகவல்கள் இல்லாவிட்டால் ‘OTP’ ஆப்ஸனை கிளிக் செய்வும் .
⦁ ஆதர் கார்டில் உள்ள தொலைபேசிக்கு எஸ் எம் எஸ் அனுப்பப்படும் . பின் இரு அட்டைகளும் இணைக்கப்படும்.

last day to link aathar card and pan card

அடுத்த செய்தி