ஆப்நகரம்

கருணாநிதி இறுதிவரை இவரை 'சார் ' என்றுதான் அழைத்தாராம்!!

போஸ்ட் மாஸ்டராக இருந்த தனது நண்பரும், வாழ்க்கையின் துவக்கத்தில் தனக்கு உதவிய வெங்கடசுவாமியை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி இறுதி வரை 'சார்' என்றே அழைத்து வந்துள்ளார்.

Samayam Tamil 10 Aug 2018, 2:53 pm
போஸ்ட் மாஸ்டராக இருந்த தனது நண்பரும், வாழ்க்கையின் துவக்கத்தில் தனக்கு உதவிய வெங்கடசுவாமியை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி இறுதி வரை 'சார்' என்றே அழைத்து வந்துள்ளார்.
Samayam Tamil கருணாநிதி
கருணாநிதி


அந்த நினைவலைகளை தற்போது வெங்கடசுவாமி பிரபல ஆங்கில நாளிதழுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் அந்த நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ''நான் சேலத்தில் போஸ்டர் மாஸ்டராக இருந்தேன். அப்போது கருணாநிதி மாடர்ன் தியேட்டருக்காக பணியாற்றிக் கொண்டு இருந்தார். டி.ஆர். சுந்தரத்தின் ''மந்திர குமாரி'' என்ற படத்திற்காக, கதை வசனம் எழுதிக் கொண்டு இருந்தார்.

அப்போது மாடர்ன் தியேட்டரில் உதவி இயக்குனராக இருந்த சோமு உதவியுடன் கருணாநிதிக்கு கோவையில் வாடகைக்கு வீடு பெற்றுத் தந்தேன். முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் ஹபீப் சாஹிப் தெருவில் வீடு கிடைத்தது. அவரது தாய் அஞ்சுகம், தயாளு மற்றும் முதல் மனைவியான பத்மாவதிக்குப் பிறந்த மு.க.முத்துவுடன் வாடகை வீட்டில் கருணாநிதி குடியேறினார்.

ஒவ்வொரு வாரமும், சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்களும் கூட்டங்களில் பேசுவதற்கு கருணாநிதி செல்வார். அவருடன் நானும் செல்வேன். திங்கள் கிழமை காலைதான் வீட்டுக்கு வருவோம்.

கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் இறந்தபோது அவரது வீட்டுக்கு முதல் ஆளாக வந்தவர் காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் தான்'' என்கிறார்.

தற்போது வேங்கடசுவாமிக்கு 87 வயதாகிறது. கருணாநிதி இவரை துவக்கத்தில் இருந்து இறுதி வரை 'சார்' என்றே அழைத்து வந்துள்ளார். எப்போது சேலத்திற்கு கருணாநிதி சென்றாலும், அவரது காரில் வெங்கடசுவாமி இருப்பாராம். இதையே, ஸ்டாலினும், கனிமொழியும் பின்பற்றி வந்துள்ளனர். எப்போது சேலம் சென்றாலும் இவர்கள் வெங்கடசுவாமியை பார்க்கத் தவறுவது இல்லை.

முரசொலி பவள விழா நடந்தபோது, இவருக்கு கனிமொழி அழைப்பிதழ் அனுப்பியுள்ளார். மேலும், பவள விழா புத்தகத்தில் வெங்கடசுவாமி குறித்து குறிப்பிடப்பட்டு இருந்தது தனக்கு பெருமையாக இருந்தது என்கிறார் வெங்கடசுவாமி. இவரது இரண்டு குழந்தைகளின் திருமணத்தை கருணாநிதி தான் நடத்தி வைத்துள்ளார்.

கருணாநிதி உடல் நலம் குன்றி மருத்துவமனைக்கு சென்றதில் இருந்து, இறந்து அடக்கம் செய்யும் வரை டிவி முன்பு தனது தந்தை அமர்ந்து நிகழ்வுகளை பார்த்துக் கொண்டு இருந்தார் என்று வெங்கடசுவாமியின் மகன் வி. பாலாஜி கூறுகிறார்.

அடுத்த செய்தி