ஆப்நகரம்

”பாலமேட்டில் பிரம்மாண்ட பேரணி”-அவிழ்த்துவிடப்பட்ட காளைகள்..!

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி பால்மேட்டில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரணியின் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

TNN 15 Jan 2017, 10:20 am
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி பால்மேட்டில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரணியின் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
Samayam Tamil lathy charge in palamedu rally to life ban on jallikattu
”பாலமேட்டில் பிரம்மாண்ட பேரணி”-அவிழ்த்துவிடப்பட்ட காளைகள்..!


மாட்டுப் பொங்கலான இன்று,மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.ஆனால் உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடை காரணமாக,பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.எனவே இன்று காலை முதல் பாலமேடு கிராம மக்கள்,தங்கள் வீட்டில் கருப்புக் கொடிகளை ஏற்றியும்,கருப்புச் சட்டை அணிந்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

பாலமேட்டில் இன்று காலை தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த உள்ளதாக தகவல்கள் பரவி வந்தது.இதனைத் தொடர்ந்து பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசல் பகுதியில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.அந்த பகுதியில் மக்கள் அதிகம் கூடி விடக்கூடாது என்பதற்காக வாடிவாசலின் அனைத்து வாயில்களையும் தடுப்புகள் மூலம் காவல்துறையினர் அடைத்தனர்.

இந்நிலையில் இன்று காலை பத்து மணி அளவில் பாலமேட்டில் உள்ள கோவிலில் ,காளைகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.அந்த வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக பாலமேட்டைச் செர்ந்த காளைகளுடன்,அதன் உரிமையாளர்களும் வந்திருந்தனர்.அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட பேரணியும் நடைபெற்றது.இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் கூட்டத்தில் இருந்த சிலர் தங்களுடைய காளைகளை அவிழ்த்து விட்டனர்.இதனையடுத்து அந்த காளைகளை அடக்க இளைஞர்கள் முயன்றனர்.நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால்,காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர்.தொடர்ந்து அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

Lathy charge in Palamedu Rally to Life ban on Jallikattu

அடுத்த செய்தி