ஆப்நகரம்

முத்தலாக் அவசரச் சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய வழக்கறிஞர்; ஏன் தெரியுமா!

சென்னை: முத்தலாக் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

TIMESOFINDIA.COM 5 Oct 2018, 6:56 pm
முஸ்லீம் மனைவியை மூன்று முறை தலாக் கூறி, உடனடியாக விவகாரத்து செய்யும் வழக்கம் நடைமுறையில் இருந்து வந்தது. இதனை தடுக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.
Samayam Tamil Triple Talaq


இந்தச் சட்டத்தின் படி, முத்தலாக் நடைமுறையில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண் தனது பிழைப்பிற்கு வழிகேட்டு நீதிமன்றத்தை அணுகலாம். தனது குழந்தைகளை கூடவே வைத்திருக்கும் உரிமையை நீதிமன்றம் மூலம் பெற முடியும்.

இந்நிலையில் முத்தலாக் அவசர சட்டத்தை எதிர்த்து, வழக்கறிஞர் ஹூசைன் அஃப்ரோஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில், முஸ்லீம்களின் தனிப்பட்ட சட்டப்படி திருமணம் என்பது சிவில் ஒப்பந்தம் ஆகும்.

இதற்கு ஷரியத் சட்டம் 1937 மற்றும் பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளின்படி அங்கீகரிக்கப் படுகிறது. ஷாயிரா பானு விவகாரத்தில் முத்தலாக் செல்லாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த தீர்ப்பின் படி, திருமண உறவை நீர்த்துப் போகச் செய்ய முடியாது.

இதுவே தற்போது வரையுள்ள சட்டமாகும். எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக, கடந்த செப்டம்பர் 19ல் மத்திய அரசு அவசர சட்டம் இயற்றியுள்ளது. இது சட்ட விரோதமானது மற்றும் செல்லாது என்று குறிப்பிட்டுள்ளார். இதனை விசாரித்த எஸ்.மணிகுமார் மற்றும் பிடி ஆஷா அடங்கிய நீதிமன்ற அமர்வு, வரும் 22ஆம் தேதி மத்திய அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.

Lawyer moves Madras HC challenging triple talaq ordinance.

அடுத்த செய்தி