ஆப்நகரம்

தீவிரமடைந்த வழக்கறிஞர்கள் போராட்டம்

சென்னை: 'வழக்கறிஞர்கள் சட்ட திருத்தை' ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

TNN 25 Jul 2016, 12:25 pm
சென்னை: 'வழக்கறிஞர்கள் சட்ட திருத்தை' ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Samayam Tamil lawyets protest in chennai high court
தீவிரமடைந்த வழக்கறிஞர்கள் போராட்டம்


கடந்த இரண்டு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வழக்கறிஞகள் இன்று நீதிமன்றத்தை முற்றுகையிடப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதனிடையே வழக்கறிஞர்கள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது போலீசார் வைத்த தடுப்புகளை மீறி வழக்கறிஞர்கள் வளாகத்திற்குள்ளே செல்ல முயன்றதால் போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. சில வழக்கறிஞர்கள் சாலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Lawyers protest in Chennai against High Court amendment to Advocate act which enables it to debar erring lawyers pic.twitter.com/2DHJiAGEX1— ANI (@ANI_news) July 25, 2016

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நீதிமன்ற வளாகத்தில் ஊர்வலம், முற்றுகை போராட்டம் போன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களே நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்ய்ப்பட்டது.

இதனையடுத்து கடந்த இரண்டு மாதங்களாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.இதனைடையே நேற்று இந்திய பார் கவுன்சில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 126 வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்தது.

அடுத்த செய்தி